December 6, 2025, 7:52 AM
23.8 C
Chennai

இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு..

images 71 - 2025

இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் கடைசி ஒரு வாரத்தில் தங்கம் விலை உயர தொடங்கியது. கடந்த 23ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,528க்கு விற்கப்பட்டது. 24ம் தேதி தங்கம் பவுன் ரூ.40,608க்கும்(25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை), 26ம் தேதி ரூ.40,688க்கும், 27ம் தேதி ரூ.40,688க்கும், 28ம் தேதி ரூ.40,840 என தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தொடர்ச்சியாக 4 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது.

புத்தாண்டு நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது விஷேச தினத்தில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 29ம் தேதி தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அன்றைய தினம் கிராம் ரூ.5,095க்கும், பவுன் ரூ.40,760க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடித்தப்பாடில்லை. மறுநாளே, அதாவது 30ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,115க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.40,920க்கும் விற்கப்பட்டது. 31ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது.

அன்றைய தினம் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,130க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.41,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் பவுன் 41 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 28 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது.

அதில் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5150க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.41,200க்கும் விற்க்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,191க்கும் சவரன் ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75.50க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories