அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு..

images 38 1 - 2026

சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வந்தால் பிடித்து கொடுக்க போலீஸ் தரப்பில் உத்தரவிட்டுள்ளது. உதவி கமிஷனர்கள் சார்லஸ், துரை ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. பரபரப்பான இந்த சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நாளில்தான் அ.தி.மு.க. அலுவலகத்தில் வரலாறு காணாத மோதல் வெடித்தது.

அதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். உதவி கமிஷனர்கள் சார்லஸ், துரை ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்யப்போவதாக கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாராவது வந்தால் அவர்களை பிடித்து கொடுக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், போலீசாரும் வெளியாட்கள் ஊடுருவி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள். ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories