யானை நாயகர்கள் பொம்மன்-பெள்ளிக்கு சிஎஸ்கே மஞ்சள் ஜெர்ஸி வழங்கிய தோனி!

dhoni and bomman - 2026
#image_title

யானை குறித்த ஆவணப் பட நாயகர்கள் பொம்மன் பெள்ளிக்கு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, தங்கள் அணியின் உடையான மஞ்சள் நிற ஜெர்ஸியை அளித்து அவர்களை கௌரவப்படுத்தினார். இது குறித்த படம் இணையதளங்களில் வைரலானது

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படம் அண்மையில் ஆஸ்கர் விருது வென்றது. இந்த ஆவணப் படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது.

கிருஷ்ணகிரியில் தாயைப் பிரிந்து தவித்த 3 மாத ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை மூலம் ஒப்படைக்கப் பட்டது. இந்தக் குட்டி யானைகளைப் பொறுப்புடன் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அண்மையில் தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இவர்களை நேரில் சந்தித்து, பாராட்டு தெரிவித்தார்.

csk bomman belli - 2026
#image_title

இந்நிலையில் இந்த ஆவணப் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ், இதில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அவர்களுக்கு தோனி அவர்களின் பெயர் பதித்த சிஎஸ்கே மஞ்சள் நிற ஜெர்சியை பரிசளித்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல், அவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கும் புகைப்படமும் வைரலானது.

இந்தப் படத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். இருப்பினும், கிண்டலடித்தும் சில பதிவுகள் வெளியாயின. “அடேய் இந்த மஞ்ச சட்டையை வைச்சு அவங்க என்ன பண்ணுவாங்க. வேறு ஏதாவது உபயோகமாக தரலாமே.” என்று ஒருவர் கேட்க, “இதப் போட்டுக்கிட்டு யானைகிட்ட காமிப்பாங்க, அது காண்டாகும்!” என்று ஒருவர் பதிலளித்திருந்தார். சரி, அந்த யானைகளுக்கு ஒண்ணும் கொடுக்கலியா என்று ஒருவர் நக்கலடித்திருந்தார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories