யானை நாயகர்கள் பொம்மன்-பெள்ளிக்கு சிஎஸ்கே மஞ்சள் ஜெர்ஸி வழங்கிய தோனி!

dhoni and bomman - 2026
#image_title

யானை குறித்த ஆவணப் பட நாயகர்கள் பொம்மன் பெள்ளிக்கு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, தங்கள் அணியின் உடையான மஞ்சள் நிற ஜெர்ஸியை அளித்து அவர்களை கௌரவப்படுத்தினார். இது குறித்த படம் இணையதளங்களில் வைரலானது

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படம் அண்மையில் ஆஸ்கர் விருது வென்றது. இந்த ஆவணப் படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது.

கிருஷ்ணகிரியில் தாயைப் பிரிந்து தவித்த 3 மாத ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை மூலம் ஒப்படைக்கப் பட்டது. இந்தக் குட்டி யானைகளைப் பொறுப்புடன் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது.

அண்மையில் தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இவர்களை நேரில் சந்தித்து, பாராட்டு தெரிவித்தார்.

csk bomman belli - 2026
#image_title

இந்நிலையில் இந்த ஆவணப் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ், இதில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அவர்களுக்கு தோனி அவர்களின் பெயர் பதித்த சிஎஸ்கே மஞ்சள் நிற ஜெர்சியை பரிசளித்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல், அவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கும் புகைப்படமும் வைரலானது.

இந்தப் படத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். இருப்பினும், கிண்டலடித்தும் சில பதிவுகள் வெளியாயின. “அடேய் இந்த மஞ்ச சட்டையை வைச்சு அவங்க என்ன பண்ணுவாங்க. வேறு ஏதாவது உபயோகமாக தரலாமே.” என்று ஒருவர் கேட்க, “இதப் போட்டுக்கிட்டு யானைகிட்ட காமிப்பாங்க, அது காண்டாகும்!” என்று ஒருவர் பதிலளித்திருந்தார். சரி, அந்த யானைகளுக்கு ஒண்ணும் கொடுக்கலியா என்று ஒருவர் நக்கலடித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories