ஊட்டி மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு..

images 44 - 2026

ஊட்டி மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் பாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைக்கும் பணி முடிந்தது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு -ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாள பாதையில் பெரிய சிறிய பாறாங்கற்கள்உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. இந்த நிலையில் செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலை ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவையை கடந்த 5 ஆம் தேதி 6-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது இதனையடுத்து மேட்டுப்பாளையம் குன்னூர் ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் மேற்பார்வையில் ரெயில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் பாதையில் உருண்டு விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் கம்ப்ரசர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டன. வெடித்து சிதறிய கற்களை அகற்றிய பின்னர் ரெயில் பாதையை மூடி இருந்த மண்ணை ரெயில்வே தொழிலாளர்கள் அகற்றினர். ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு ரெயில் தண்டவாளம் மற்றும் ராக் பார்கள் உடைந்து வளைந்து சேதமடைந்தன. ரெயில்வே தொழிலாளர்கள் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் ராக்பார்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் மற்றும் ராக் பார்களை பொருத்தினார்கள். ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலை 6:30 மணிக்கு முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும்பணி முழுவதும் முடிவடைந்ததால் 2 நாட்களுக்கு பின்னர் இன்று புதன்கிழமை முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் -ஊட்டி, மற்றும் ஊட்டி -மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாக என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories