மைனர் பெண் கடத்தல்! போலீஸ் நடவடிக்கை எடுக்காததால்… தீக்குளிக்க முடிவு செய்த பெற்றோர்!

trying-to-set-fire
trying-to-set-fire

மதுரை விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் கடத்தல்! போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் தீக்குளிக்க முடிவு!

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் பாண்டியம்மாள் ஆகியோரின் மகள் சௌந்தர்யா (வயது 17)

இவரை கடந்த எட்டாம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து சந்திரன் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கண்காணிப்பாளர், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை!

இதனால் சௌந்தர்யா பாட்டி பொம்மு 60 விஷம் குடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் சந்திரன் பாண்டியம்மாள் ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.

இதுகுறித்து சந்திரன் கூறியதாவது: விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி கிராமத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் எங்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருந்தார்கள்

எனது மூத்த மகள் கடந்த வருடம் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இரண்டாவது மகள் சவுந்தர்யா விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாள். கடந்த மாதம் ஒன்னாம் தேதி எங்களது மகள் சௌந்தர்யாவை பக்கத்து ஊரைச் சேர்ந்த பால் கறக்கக் கூடிய விவேக் (25) என்ற பையன் கூட்டிச் சென்று விட்டான் 

விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தோம். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து எனது மகளை எங்களிடம் அனுப்பி வைத்தனர். பின்னர் கூட்டிச் சென்றவர்களை போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தனர்

சவுந்தர்யாவை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி விட்டு வந்தேன். அங்கிருந்த சௌந்தர்யாவை எட்டாம் தேதி உறவினர் பையன் ஒருவன் கூட்டிச் சென்று இருப்பதாக தெரிந்தது 

இதுகுறித்து   நாகமலை புதுக்கோட்டையில் புகார் கொடுத்தோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் பதிவு தபால் மூலம் அனுப்பி உள்ளோம்

போலீசார் எனது மகளை கண்டுபிடித்து கொடுக்கவில்லை! இதனால் எனது குடும்பமே மிகுந்த மன வேதனையில் உள்ளோம்! இந் நிலையில் எனது அம்மா விஷம் குடித்து சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் முதல் சிகிச்சை பெற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சௌந்தர்யா உயிரோடு இருக்கிறாளா என்று சந்தேகமாக இருக்கிறது. போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நாங்கள் மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பாக தீக்குளிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories