December 5, 2025, 7:41 PM
26.7 C
Chennai

திண்டுக்கல் பிறந்து 1 மாதமான ஆண்குழந்தைக்கு மது ஊட்டிய பெண்.‌.

1762654 sayednazir04 - 2025

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தைக்கு மது குடிக்க வைத்த பெண்ணால்ல் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தையை கையில் வைத்து அந்த குழந்தைக்கு வாயில் மதுஊற்றி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

மேலும் தானும் மதுபானம் குடித்துகொண்டு அந்த குழந்தையை அடித்து கொண்டே இருந்தார். இதைபார்த்த அப்பகுதி வியாபாரிகள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அந்த குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை வாங்கி பார்த்தபோது அது மயக்கத்தில் இருந்தது. மேலும் அந்த போதை பெண்ணின் மடியில் மேலும் சில மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

2 கிலோ 600 கிராம் எடை கொண்ட அந்த ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்தான் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். போதையில் திரிந்த பெண் அது தனது குழந்தை என்று சொல்லிக்கொண்டே நடக்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார். ஆனால் 50 வயது மதிக்கத்தக்க அவர் உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

அவர் வைத்திருந்த பையில் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த குழந்தை கடத்தி வரப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் இருந்த பெண்ணை மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் தற்போது சிகிச்சையில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories