கோயில்களில் நாளை சனி மகா பிரதோஷ விழா!

pradosham in karur pasupathiswarar temple - 2026

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள, சிவ ஆலயங்களில் இம்மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. மிகவும் விசேஷமானது .

இந்த பிரதோஷ காலத்தில், சிவபெருமான் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு அபிஷேகங்கள் செய்து மாலையில் அணிவித்து வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது பக்தரின் நம்பிக்கையாகும். பொதுவாக, சிவாலயங்களில் பிரதோஷமானது சோமவார பிரதோஷம், சனி மகா பிரதோஷம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை அருகே உள்ள சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், சனி மகா பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது .

இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரன், சிவபெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.
அதைத் தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரகாரங்களில் வலம் வரும்.
இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிப்பர் .

இதை அடுத்து, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகளும், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி. எம். மணி, கோயில் தக்கார் இளமதி, பள்ளி தாளாளரும் கவுன்சிலருமான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதே போன்று, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், இன்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரன், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ் ஆலயம், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களிலும் சனி மகா பிரதோஷ விழா மாலை நடைபெறும்.

இதை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் ஆன்மீக குழுவினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories