spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மதுரைமதுரை பகுதியில்... காமராஜர் பிறந்த நாள் விழா!

மதுரை பகுதியில்… காமராஜர் பிறந்த நாள் விழா!

- Advertisement -

கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மதுரை பகுதியில் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான், ஐயப்பாநாயக்கன் பட்டி, மேலக்கால், தேனூர் உட்பட இப்பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த தின விழா சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், இந்து நாடார் உறவின்முறை சார்பாக காமராஜர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் வையாபுரி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தரபாண்டியன்,நிர்வாகி மனோகரன் என்ற நாகராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு கேசரி வழங்கினார்கள். மாணவ, மாணவிகளுக்கு டிக்ஷனரி வழங்கினார்கள்.

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராம கமிட்டி செயலாளர் வி. பி .கந்தசாமி தலைமையில் கிராம மக்கள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

சோழவந்தான் இந்துநாடார் உறவின்முறை பரிபாலன சங்கத் தலைவர் தங்கபாண்டியன் தலைமையில், செயலாளர் ராஜகுரு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு. க நகரச் செயலாளர் திரவியம்,வாடிப்பட்டி நகரச் செயலாளர் மதன் ஆகியோர் முன்னிலையில் ஒன்றியச் செயலாளர் விரும்பராஜன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வீரமாரிபாண்டி, இனிப்பு வழங்கினார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் இருளாண்டி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் சங்கர்,முத்தீஸ்வரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சக்கரபாணி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். தலைவர் சங்கிலிமுருகன் இனிப்பு வழங்கினார்.

பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் லதாகண்ணன் இனிப்புவழங்கினார். பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்யபிரகாஷ், குருசாமி,முத்துச்செல்விசதீஷ்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரவை செயலாளர் ராஜபாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் மலைச்சாமி கேபிள் மணி உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

காங்கிரஸ் கட்சி சார்பாக சங்கர பாண்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலக்கல் கிராமத்தில், நாடார் இளைஞர் பேரவை சார்பாக காமராஜர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்தனர். இதில், இனியா மொபைல் உரிமையாளர் மணி தலைவர் ராஜா,செயலாளர் பிரகாஷ் மற்றும் நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாலமேட்டில், காமராஜர் பிறந்த நாளையொட்டி சிலைக்கு நாடார் சங்கம் சார்பாக பால் அபிஷேகம்!

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேடு பத்ரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்து நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக பால், தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேசன் செயலாளர் சுரேஷ், பொருளாளர் ரமேஷ், பள்ளியின் தலைவர் கரிகாலன், துணைத் தலைவர் சிவாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவகுமார், பொருளாளர் திருஞானம், பாலமேடு பேரூராட்சித் தலைவி சுமதி பாண்டியராஜன், கவுன்சிலர் செல்வி விஜயராஜன், பால் பண்ணைத் தலைவர் பன்னீர்செல்வம், மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe