செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 121வது பிற்நதநாள் விழா.
செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர்வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் கர்மவீரர்காமராஜா் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமைதாங்கினார். செயலாளா் சீதாராமன், பொருளாளா் இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.
பள்ளி தலைமைஆசிரியா் சேவியா்அலெக்சாண்டிரியா அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட காமராஜா் திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னா் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி கிளப் உதவி ஆளுநர் சித்தன்ரமேஷ் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
மாணவர்களுக்கு நிர்வாகிகள் கல்வி உபகரணங்கள், நோட்புக் இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினா்கள் வீடி.குமார், சதீஷ்(எ)லெட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் நன்றி கூறினார்.