சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

sivakasi fire works accident - 2026

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன.

இதில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி வித்தில் சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் சேதமடைந்த நிலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறி வருகிறது.

சம்பவ இடத்தில் சார் ஆட்சியர் பிரியா ரவிசந்திரன் மற்றும் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் மத்திய வெள்ளி பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளது நெடுங்குளம். இங்கு, ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேன்சி ரக பட்டாசுகளுக்கான வேதிப் பொருட்களை கலக்கும் அறையில் எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டது. இதில் கண் இமைக்கு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி : இந்த விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் 16 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35), சொக்கம்பட்டியைச் சேந்த மாரியம்மாள்(38), கூமாபட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி(40) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

7 பேர் காயம் : மேலும், எம். புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(50), ரெங்கபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி(38), கோபாலன்பட்டியைச் சேர்ந்த ராமசுப்பு(43), ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சக தொழிலாளர்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இந்த விபத்தில் கோபாலன்பட்டியைச் சேர்ந்த முனியம்மாள்(48), கூமாப்பட்டியைச் சேர்ந்த பாத்திமுத்து(53), ராபீயாபீவி(48), கோமதி(35) ஆகிய 4 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை வேறு பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த வெடி விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலையத்தினர் ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் ரத்து : இந்நிலையில், வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையை ஆய்வு செய்த சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories