
தாம்பரம் – செங்கோட்டை, தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில்களில் ஏற்கனவே கோடை விடுமுறை கூட்டத்தை கருத்தில் கொண்டு 6பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, தலா ஏழு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு நாளை ஜூன் 20முதல் வரும் ஆக 28 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
தென்மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. இதனை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – செங்கோட்டை இரு மார்க்கத்திலும் சிலம்பு (20681/20682) மற்றும் தாம்பரம் – நாகர்கோவில் இரு மார்க்கத்திலும் (22657/22658) ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இதன்படி இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் இந்த வசதி சிலம்பு ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 27 வரையும், செங்கோட்டையில் இருந்து ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும்.
இதேபோல நாகர்கோவில் ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 27 வரையும் நாகர்கோவிலில் இருந்து ஜூன் 19 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும்.
இதன் மூலம் இந்த ரயில்கள் தற்காலிகமாக ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் ஆகியவற்றுடன் இயக்கப்படும்.சென்ட்ரல் – திருவனந்தபுரம் விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு ‘ஏசி’ பெட்டி, வரும் 27 முதல் ஆகஸ்ட் 27 வரை இணைத்து இயக்கப்படுகிறது
சென்ட்ரல் – ஆலப்புழா விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு ‘ஏசி’ பெட்டி, வரும் 25 முதல் ஆக., 26 வரை இணைத்து இயக்கப்படும்.
என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்





