பயணிகள் வசதிக்காக சிலம்பு ரயிலில் கூடுதல் பெட்டி!

railway news - 2026
#image_title

தாம்பரம் – செங்கோட்டை, தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில்களில் ஏற்கனவே கோடை விடுமுறை கூட்டத்தை கருத்தில் கொண்டு 6பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, தலா ஏழு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு நாளை ஜூன் 20முதல் வரும் ஆக 28 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

தென்மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. இதனை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – செங்கோட்டை இரு மார்க்கத்திலும் சிலம்பு (20681/20682) மற்றும் தாம்பரம் – நாகர்கோவில் இரு மார்க்கத்திலும் (22657/22658) ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இதன்படி இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் இந்த வசதி சிலம்பு ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 27 வரையும், செங்கோட்டையில் இருந்து ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும்.

இதேபோல நாகர்கோவில் ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 27 வரையும் நாகர்கோவிலில் இருந்து ஜூன் 19 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும்.

இதன் மூலம் இந்த ரயில்கள் தற்காலிகமாக ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் ஆகியவற்றுடன் இயக்கப்படும்.சென்ட்ரல் – திருவனந்தபுரம் விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு ‘ஏசி’ பெட்டி, வரும் 27 முதல் ஆகஸ்ட் 27 வரை இணைத்து இயக்கப்படுகிறது

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

சென்ட்ரல் – ஆலப்புழா விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு ‘ஏசி’ பெட்டி, வரும் 25 முதல் ஆக., 26 வரை இணைத்து இயக்கப்படும்.
என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories