ஆடி பெருக்கு நாளில் 2026 ஆங்கில காலண்டர் ஆல்பம் பணிகள் சுறுசுறுப்பு!

calender printing in sivakasi - 2026

‘ஆடி 18’ம் பெருக்கு நாளில், ‘2026’ ஆங்கில புத்தாண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடும் பணிகளில், சிவகாசி காலண்டர் நிறுவனங்கள் சுறுசுறுப்பு…..

வரும் ‘2026’ ஆங்கில புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்களுக்கான ஆல்பம் தயாரிக்கும் இறுதிகட்ட பணிகளில்,சிவகாசி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் அச்சிடுவதால் சிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன.

காலண்டர்களின் வகைகள்,ரகங்கள், புதிய டிசைன்கள், விலை விவரங்கள் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றினைத்து முதலில் ஆல்பங்களாக தயாரிப்பார்கள். தயாரிக்கப்பட்ட ஆல்பங்களை ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி 18’ம் பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் செய்து வெளியிடுவது வழக்கம்.

காலண்டர் ஆல்பங்களை முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஆடி பெருக்கு நாளில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கும்.

இந்தாண்டிற்க்கான புதுவரவான பொற்காலம், புதுயுகம், வழிகாட்டி,VIP காலண்டர் என அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இது குறித்து காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெயசங்கர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் சித்திரை மாதம் பிறந்து, பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தொடங்கப்படும்.

வழக்கமான காலண்டர்களுடன் புதிய ரகங்களும் அறிமுகம் செய்யப்படும். அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ‘ஆடி 18’ம் பெருக்கு நாளான இன்று சிறப்பு பூஜைகளுடன் காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட உள்ளன.

மூலப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வகைகளால், புத்தாண்டு தினசரி காலண்டர்களின் விலை கடந்தாண்டை விட இந்தாண்டு 7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் உயரும் நிலை உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories