நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை இன்று காலை திறக்கப் பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பாசன வசதிக்காக இன்று சபாநாயகர் மு.அப்பாவு, பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.