தண்ணீர் பீய்ச்சி அடித்து சேதமான சந்திரன் சிலை சரிசெய்யப் படுமா?! நெல்லையப்பர் கோயிலில் தொடரும் சோகம்!

nellaiappar navagraha chandran 696x387 1 - 2026
nellaiappar navagraha chandran

மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவான வணக்கம்…

அருள்தரும் அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரபகவான் திருவுருவச்சிலை இடது கை கடந்த 27.4.2018.நடைபெற்ற கும்பாபிசேகத்திற்காக சுத்தம் செய்யும் போது 25.4.2018 அன்று அதிக அழுத்தமான தண்ணீர் பீச்சி சுத்தம் செய்யும் போது பின்னப்பட்டு விட்டது.

சேதமடைந்த சிலையை வைத்து பூஜை செய்யக்கூடாது உடனே இதை பழுது பார்க்க வேண்டும் என்று இணை ஆணையரிடமும் நிர்வாகஅதிகாரியிடமும் உடனே புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தின் சார்பாக இன்று வரைஎவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பழுது பார்க்கப்படவில்லை.

கடந்த 28.7.2018.அன்று திருக்கோயில் ஆய்வுக்கு வருகை புரிந்த இந்து அறநிலையத்துறை செயலர் திருமிகு.அபூர்வவர்மா அவர்கள் கவனத்திற்கு பிண்ணப்பட்ட ‘சந்திரன் சிலை’யை நேரில் காண்பித்து விபரம் தெரிவித்தோம். அவரும் பிண்ணப்பட்ட சந்திரன் சிலையை பார்வையிட்டு திருக்கோயில் நிர்வாகம் அழைத்த சிவாச்சாரியாரிடம் விபரம் கேட்டதற்கு அவரும் சந்திரன் சிலை பிண்ணப்பட்டு உள்ளது.அதை மாற்ற வேண்டும் என்று கொடுத்த தகவல் விவரத்தின் அடிப்படையில் *சந்திரன் சிலை* யை மாற்ற உடனடியாக ஏற்பாடு செய்யும் படி இணை ஆணையரிடம் உத்தரவு கொடுத்து அவரும் சரி என்று கூறினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் உடன் இருந்தார்கள். ஆனால் 7.7.2021.இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து தந்தி.T.V.யில் நான் கூறிய சில தகவல்கள் ஒலி பரப்பப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திரன் சிலை 2004 ம் ஆண்டு கும்பாபிசேகத்திற்கு முன்பே உடைந்து விட்டது என்று 14.8.2018 அன்று கோயில் பணியாளர்கள் கூறுவதாக ஒரு செய்தி மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்தது. இது சுத்தப் பொய்!

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

2016ம் வருடம் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள இந்த சந்திரன் சிலை படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் கும்பாபிசேகம் முடிந்து மூன்று வருடம் ஆகி விட்டது. உடைக்கப்பட்ட சந்திரன் சிலையும் பழுது பார்க்கப்படவில்லை.

letter - 2026

ஆறு மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிப்போம் என்று 2004 கும்பாபிசேகத்திற்கு முன்பு பழுதுபட்டு தற்போது நிர்வாகத்தால் இடித்து போடப்பட்டுள்ள அம்மன்கோயில் சீவிலி சுற்றும் பிரகாரமும் கட்டி முடிக்கப்படவில்லை.

பதினேழு வருடமாக அம்பாள் கோயிலில் தினமும் காலை, மாலை பலி போட வேண்டிய பிராகாரத்தில் சீவிலி சுற்றவில்லை என்பதும் ஆடிப் பூரத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா போன்ற விழாவுக்காக அன்னை காந்திமதி அம்பாள் முறையான சுற்று பிராகாரம் வழியாக செல்லாமல் எப்படியோ சுற்றி திருவிழாவையும் முடிக்கிறார்கள் என்பதும் ஊருக்கெல்லாம் தெரியும்

இதற்கு எல்லாம் அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

திருவனந்தல் வழிபாட்டுக்குழு.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆன்மீகப் பணியில்
சிவ. அ. வெங்கிட சுப்பிரமணியன்,
Ex. சேர்மன். நெல்லை மாநகராட்சி


நம் தினசரி தளத்தில், 05/05/2018 அன்று வெளியான செய்தி

நெல்லை கோயில் கும்பாபிஷேகத்தில் அதிர்ச்சி!: சிதிலமடைந்த சந்திரனுக்கு வழிபாடு! பக்தர்கள் வேதனை!


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories