கன்னியாகுமரி மற்றும் திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் – கூட்டம்

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். திற்பரப்பு அருவியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்னர் தமிழக கேரளா சுற்றுலா பயணிகள்.

962649 - 2026

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சீஸன் நேரம், பண்டிகை விடுமுறை காலம், வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். சனிக்கிழமையான நேற்று அதிகாலையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மதியத்திற்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் இன்று அதிகாலையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மையங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் கூடினர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சென்று வந்தனர். சுற்றுலா படகு கட்டணம் 50 சதவீதம் உயர்ந்த போதிலும் வழக்கம்போல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதைப்போல் கோடைகாலம் போன்று சுட்டெரித்து வரும் வெயிலுக்கு மத்தியில் திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்தனர். மேலும் ஆசியாவிலேயே உயரமானதும், நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்குத்துறை பீச், கோவளம் பீச், லெமூரியா பீச் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, திற்பரப்பு செல்லும் சாலை போன்றவற்றில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories