April 23, 2025, 6:46 PM
30.9 C
Chennai

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்துவை தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில செயலாளர் மணிமகேஷ்வரன் மற்றும் செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ண்ன நேரில் அழைத்து பாராட்டு சான்று வழங்கி மரியாதை செலுத்தினர்.

திருப்பதியை அடுத்துள்ள காளகஸ்தி திருக்கோவிலுக்கு புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்து தனது குடும்பத்துடன் வழிபட சென்றார். அப்போது ரோட்டில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்க பணம், பாஸ்வேர்டுடன் கூடிய ஏடிஎம் கார்டு, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 27 நபர்கள் பயணம் செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கட் இருந்துள்ளது.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவர் தொலைந்துபோன தனது போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதனை எடுத்து பேசிய புளிங்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர், தங்களுடைய போன், மற்றும் ரொக்க பணம் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும், தாங்கள் எங்கிருப்பதாக தெரிவித்தால் நான் நேரில் வந்து தருகிறேன் என கூறி, ஆட்டோ மூலம் அவர்கள் இருந்த பகுதிக்குச் சென்று அவர்களுடைய பணம், செல்போன், ஆன்லைன் டிக்கட் ஆகியவற்றை ஒப்படைதுள்ளார்.

இவரின் நேர்மையான செயலால் நெகிழந்துபோன மத்தியபிரதேசத்தை சார்ந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்த்தோடு அவர்களுடைய பயணத்தையும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

ALSO READ:  எண்ணெய் உணவைக் குறையுங்கள்; ஆரோக்யம் பேணுங்கள்!

இந்நிலையில், மாரிமுத்துவின் நேர்மையான செயலை பாராட்டும் வகையில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுப்புராம் ஆலோசனையின்படி, மாநில செயலாளர் மணிமகேஷ்வரன், மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ராமு, தென்காசி நகர தலைவர் மாரியப்பன், நகர பொறுப்பாளர் குருவாயுர் கண்ணன், திருமால், சித்தர் மறுமலர்ச்சி தலைவர் வக்கீல் முத்துமாரியப்பன், சிவக்குமார், அவைத்தலைவர் துரைராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன், மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவர் பாஸ்கர் கனகராஜ் ஆகியோர், மாரிமுத்துவின் நேர்மையை பாராட்டும் வகையில் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories