February 11, 2025, 10:34 AM
27.5 C
Chennai

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்துவை தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில செயலாளர் மணிமகேஷ்வரன் மற்றும் செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ண்ன நேரில் அழைத்து பாராட்டு சான்று வழங்கி மரியாதை செலுத்தினர்.

திருப்பதியை அடுத்துள்ள காளகஸ்தி திருக்கோவிலுக்கு புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்து தனது குடும்பத்துடன் வழிபட சென்றார். அப்போது ரோட்டில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்க பணம், பாஸ்வேர்டுடன் கூடிய ஏடிஎம் கார்டு, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 27 நபர்கள் பயணம் செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கட் இருந்துள்ளது.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவர் தொலைந்துபோன தனது போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதனை எடுத்து பேசிய புளிங்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர், தங்களுடைய போன், மற்றும் ரொக்க பணம் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும், தாங்கள் எங்கிருப்பதாக தெரிவித்தால் நான் நேரில் வந்து தருகிறேன் என கூறி, ஆட்டோ மூலம் அவர்கள் இருந்த பகுதிக்குச் சென்று அவர்களுடைய பணம், செல்போன், ஆன்லைன் டிக்கட் ஆகியவற்றை ஒப்படைதுள்ளார்.

இவரின் நேர்மையான செயலால் நெகிழந்துபோன மத்தியபிரதேசத்தை சார்ந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்த்தோடு அவர்களுடைய பயணத்தையும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

ALSO READ:  டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!

இந்நிலையில், மாரிமுத்துவின் நேர்மையான செயலை பாராட்டும் வகையில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுப்புராம் ஆலோசனையின்படி, மாநில செயலாளர் மணிமகேஷ்வரன், மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ராமு, தென்காசி நகர தலைவர் மாரியப்பன், நகர பொறுப்பாளர் குருவாயுர் கண்ணன், திருமால், சித்தர் மறுமலர்ச்சி தலைவர் வக்கீல் முத்துமாரியப்பன், சிவக்குமார், அவைத்தலைவர் துரைராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன், மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவர் பாஸ்கர் கனகராஜ் ஆகியோர், மாரிமுத்துவின் நேர்மையை பாராட்டும் வகையில் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Logged in as தினசரி செய்திகள். Log out?

Please enter your comment!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories