நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Published:

nellaiappar temple3 - 2026நெல்லையப்பர் கோவில் ஆனி ப்ரம்மோத்ஸவ கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித் திருவிழா தேரோட்டத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் நெல்லைக்கு வருகிறார்கள்.

nellaiappar temple2 - 2026இந்த ஆண்டுக்கான ஆனித் திருவிழா இன்று தொடங்கியது. இன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது. கொடிமரத்துக்கு தூப தீப ஆராதனைகள், பதினாறு வகை உபசாரங்கள் ஆகியன விமர்சையாக நடைபெற்றது.

nellaiappar temple1 - 2026

விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

nellaiappar9 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img