உள்ளூர் செய்திகள்

ஜெகதீஸ் துரை கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க: வைகோ

மணல் கடத்தல் கும்பலால் கொலைசெய்யப்பட்ட தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ் துரை கொலைக்குக்காரணமானவர்களைக் கைது செய்க-வைகோ அறிக்கை

எம்.எல்.ஏ., நிலத்தில் கிணறு தோண்டிய போது தொழிலாளி பலி

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ரோப் அறுந்து விழுந்து பலி -2பேர் படுகாயம்

கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு

திருச்சி விமான நிலையத்தில்ரூ .18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த ஜலாலுதீனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10, +2 தேர்வு முடிவுகளை டிவி., நாளிதழில் வெளியிட தடை கோரி மனு!

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க பள்ளிகளிலேயே 10, +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.

இறக்குமதி மணலை யாரும் விற்கக் கூடாது! பொதுப்பணித் துறைக்கே உரிமை உண்டு! அரசாணை வெளியீடு!

இறக்குமதி மணல் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். யார் மணலை இறக்குமதி செய்தாலும் அதைப் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே விற்க வேண்டும்.
- 2026

மணல் கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி

அவரது உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

மணல் கொள்ளையைத் தடுத்த காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் ஜெகதீசன் அடித்துக் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைதுக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரினை அடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில்,...

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அடிக்கல் நாட்டிய இபிஎஸ் – ஓபிஎஸ்!

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ரூ. 50 கோடியே 80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி ரூ. 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் ஜெயலலிதா நினைவு மண்டபம், பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ரவுடி ராக்கெட் ராஜா கூட்டாளிகளுடன் சென்னையில் கைது

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ரவுடி ராக்கெட் ராஜா, வெங்கடேச பண்ணையாரின் வலது கரமாக செயல்பட்டவர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மீண்டும் தொடங்கிய போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்ற வருடத்தைப் போல் இந்த வருடம், நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று சென்னையில் சிபிஎஸ்இ., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- 2026

Recent articles