உள்ளூர் செய்திகள்

காவலர் மீது கொலைவெறித் தாக்குதல்! கைதாகிறார் சீமான்? போலீஸார் குவிப்பு!

சென்னையில் இன்று பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்எல்ஏக்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனூடே சீமானை முந்தைய ஜாமீனில் வெளிவர இயலாத வழக்குகளில் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏப்.20க்குள் ஐபிஎல் டிக்கெட் பணத்தை திரும்பப் பெறலாம்!

வரும் ஏப்.,14ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதற்கு பின்னர் கட்டணங்களை திரும்பப் பெற முடியாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

போரினால் அல்ல, அன்பினால் வெல்வதே இந்தியாவின் வழி: பிரதமர் மோடி!

தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தொழில் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் தொழில்துறை மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்தில் இந்த 2 வழித்தடங்கள் தான் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிக்கப் போகின்றன. தளவாட உற்பத்திக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப் படும் என்று பேசினார் மோடி.

மேக் இன் இந்தியா; தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

கண்காட்சியை துவக்கி வைக்க வந்த பிரதமரை வரவேற்ற அவர், பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும் வகையில், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறை திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

கறுப்புச் சட்டை; கறுப்புக் கொடி: கருணாநிதியின் மஞ்சள் துண்டில் மாற்றமில்லை!

இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல்., சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றம்!

இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நடக்க இருந்த 6 போட்டிகள் திருவனந்தபுரம், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஆறு போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

சென்னையில் மோடி; வரவேற்ற முதல்வர்: எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டம்!

எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ளார் மோடி. அவரை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று கறுப்புச் சட்டை அணியப் போகிறீர்களா? அப்படி என்றால் இதைப் படிங்க முதலில்!

இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லி, சென்னை மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

‘கள்ளத் தோணி’ புகழ் வைகோ கோழைத்தனம் பற்றி பேச தகுதியற்றவர்!

கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.சென்னை...

நிஜாம் பாக்கு உரிமையாளர் வீட்டில் சோதனை: கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல்

சென்னை மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை என பல இடங்களிலும் நடைபெறும் சோதனையில், கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் முறையாக நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் மோடி! ஹெலிகாப்டரில் அல்ல; ஐஐடி.,வளாகத்தில்!

இன்று காலை மதிமுக., பொதுச் செயலர் வைகோ, ஹெலிகாப்டரில் பறந்து ஹெலிகாப்டரில் இறங்கி, சாலை வழியாக வர பயப்பட்டுக் கொண்டிருக்கும் கோழை என்று மோடியை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது!

சென்னைக்கு குடிநீர் தர பலத்த எதிர்ப்பு! இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல!

கடலூர்: வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை தடுக்க வேண்டும் என்று பலத்த எதிர்ப்பு கிளப்பப் பட்டுள்ளது. 
- 2026

Recent articles