ஐபிஎல்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?
இயக்குனர் பாரதிராஜா இந்த நடவடிக்கை குறித்துக் கூறியபோது, போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி; இது தமிழன் என்ற அடையாளத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் அவர், வரும் 20ஆம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று கூறினார்.
வரம்பு மீறிய வைகோ; வறுத்தெடுத்த தமிழிசை
பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே. பிரதமரின் வருகையை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோவை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் தொடங்கிய மாபெரும் ராணுவ தளவாடக் காட்சி: யுடியூப், டிவிட்டரில் லைவ்!
இந்தக் கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் 13-ந் தேதியும், 15-ந் தேதியும் நிறுத்தி வைக்கப்படும். அவற்றினுள் ஏறி பார்க்கவும் அனுமதிக்கப்படும்.
குதிக்கிறார் தீபா! காவிரிப் போராட்டத்தில்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜெ தீபா நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். ஈரோடு ரயில் நிலையம் முன்பு தீபா பேரவை நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
விஜய் ஆண்டனியின் ‘காளி’க்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் : உயர் நீதிமன்றம்
இவரது மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர் மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை 11ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தினால், திட்டமிட்டப்படி வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.
பாமக.,வின் ரயில் மறியல் போராட்டம்; மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்!
காவிரி விவகாரத்தில் பாமக., இன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.
தமிழக போராட்டங்களால் கர்நாடக பேருந்துகள் நிறுத்தம்
சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனைச் சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. அவை பாதுகாப்பு கருதி புளிஞ்சூர் சோதனைச் சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப் படுகின்றன.
காக்கிகளுக்கு எதிராகப் புறப்பட்ட கறுப்புகள்: களையெடுத்தால் தமிழகம் அமைதிப்பூங்காதான்!
உண்மையில் இது போன்ற மனோபாவம் வளர்வது, தமிழகத்தின் தன்மைக்கே கேடுதான்!! இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வைகோ, சீமான், அமீர் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள், மார்க்க நெறி வெளித்தெரியாமல் தமிழன் எனும் பெயரில் தலிபானிசத்தை வளர்க்கும் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் காவல் துறையால் நன்கு கவனிக்கப் பட வேண்டியவர்கள்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...
ரண களமான சேப்பாக்கம் களம்: செருப்பு வீச்சு; கொடிகள் வீச்சு: 780 பேர் கைது!
மக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுகிறது, காவிரி பிரச்னையைவிட கிரிக்கெட் போட்டியை நடத்துவது அதிமுக அரசுக்கு முக்கியமாகிவிட்டது என்று கூறினார் முக. ஸ்டாலின்
தேசியம் பேசுபவர்களால் தண்ணீர் பெற்றுத் தர இயலவில்லை: பாரதிராஜா
தமிழர்களுக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செயல்பட வேண்டும்; தமிழகத்தில் பாஜக துளிர்க்க முடியாது என்று கூறினார்கள்.
செல்போனுக்கு தடையில்லை; சேப்பாக்கம் மைதானத்தில் ஜாலி ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(ஏப்., 10) நடக்கும் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.