Breaking News
ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் மனு: காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவு
அண்மையில் பெரியார் சிலை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகக் கூறி, அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. இந்தப் பின்னணியில், ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரி சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்று கொடுக்கப் பட்டது.
அந்த 75 நாட்களும் சிசிடிவி கேமராக்கள் எல்லாம்… அப்பல்லோ பிரதாப் ரெட்டியில் பகீர் பதில்!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். மேலும், வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
கோவை தனியார் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, மதுரையிலிருந்து ஆம்புலன்ஸ் விமானத்தில் கோவை கொண்டு செல்லப்பட்டார் ஜெயஸ்ரீ.
மர்ம நபர்கள் செயின் பறித்த போது கீழே விழுந்த சுகாதார ஆய்வாளர் மரணம்
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மல்லிகா தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்தார்.
நாளை தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா!
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, மார்ச் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது.
கனிஷ்க் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களுக்கு சிபிஐ சம்மன்
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மாற்றுப் பாதையில் செல்ல முயற்சி: ரதயாத்திரையை தடுத்த போலீஸார்!
திட்டமிடப் படாத புதிய பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படலாம் என்று எடுத்துக் கூறியதை அடுத்து, காவல்துறை கூறிய கிழக்கு கடற்கரை சாலையில், தூத்துக்குடி நோக்கி ரத யாத்திரையை தொடர்ந்து செல்லுமாறு பாஜக., நிர்வாகிகள் ரதயாத்திரையில் வந்தவர்களிடம் பேசினர். இதை அடுத்து போலீஸார் திட்டமிட்ட பாதையில் ரதம் புறப்பட்டுச் சென்றது.
திருவண்ணாமலை கோயில் யானை மரணம்!
திடீரென நேற்று இரவு யானை காலமானது. இந்த செய்தி கேட்டு, கோயிலுக்கு வரும் அன்பர்கள், பெரிதும் துயர் அடைந்தனர். காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க
ஆசிரியர் அந்தோணிசாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக பணியாற்றிவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் பதவி நீக்கம்
ஏப்ரல் 1-ம் தேதிக்குள் கல்லூரி முதல்வரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கூடுதல் தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு நிர்மலா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சசிகலா அளித்த பிரமாண பத்திரம் தகவல் -விசாரணை ஆணையம் மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா...
ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது?
இதைத்தான், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தெளிவாகச் சொன்னார்கள். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் வழக்கமான ரத யாத்திரை. இதன் பின்னணியில் விசுவ இந்து பரிசத்தோ ஆரெஸ்ஸெஸ்ஸோ இல்லை என்று சொன்னார்கள்.