December 6, 2025, 4:33 AM
24.9 C
Chennai

மாற்றுப் பாதையில் செல்ல முயற்சி: ரதயாத்திரையை தடுத்த போலீஸார்!

Ramarajya ratha yathra10 - 2025

ராமநாதபுரம்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராம ராஜ்ய ரத யாத்திரை, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ரதத்துக்கு போலீஸார் முழு பாதுகாப்பையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ராமேஸ்வரத்தில் இந்த ரதம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப் பட்டது.

ஐந்து கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ராம ராஜ்ய ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தொடங்கிய இந்த யாத்திரை ஐந்து மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்துள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ரத யாத்திரைக்கு போலீஸார் முழு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை ராமேஸ்வரம் மாவட்டம் சென்றடைந்தபோது போலீஸ் அறிவுறுத்திய பாதையான கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லாமல், தேவிபட்டினம் வழியாக செல்ல முயன்றது. ஆனால், மாற்றுப் பாதையில் செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு கருதி, திட்டமிட்டபடி குறிப்பிட்ட பாதை வழியாகவே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி ரதத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், ரதத்துடன் அங்கிருந்த உள்ளூர் பாஜக., நிர்வாகிகளிடம் நிலைமையை எடுத்துச் சொன்ன போலீஸார், திட்டமிட்ட பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். திட்டமிடப் படாத புதிய பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படலாம் என்று எடுத்துக் கூறியதை அடுத்து, காவல்துறை கூறிய கிழக்கு கடற்கரை சாலையில், தூத்துக்குடி நோக்கி ரத யாத்திரையை தொடர்ந்து செல்லுமாறு பாஜக., நிர்வாகிகள் ரதயாத்திரையில் வந்தவர்களிடம் பேசினர். இதை அடுத்து போலீஸார் திட்டமிட்ட பாதையில் ரதம் புறப்பட்டுச் சென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories