உள்ளூர் செய்திகள்

அது வேற வாயி.. இது நாற வாயி…: திமுக.,வை கிண்டலடிக்கும் ராமதாஸ்

மதுக்கடை பார்களை நடத்துவதற்கு திமுக தயார்: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ரகுபதி பேச்சு - ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு என்று முழக்கமிட்டது வேறு வாய் என்றால் இப்படி பேசுவது என்ன வாய்?

சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது! கண்டித்து தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் சாலைமறியல்!

இதனிடையே, ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் திமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அந்தப் பகுதி வழியே வந்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி சந்தித்துப் பேசினார். .

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார் ஸ்டாலின்: ஓபிஎஸ் கடும் கண்டனம்

ரத யாத்திரையால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மத சார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளியேற்றம்!

ஏற்கெனவே, அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பில் ஈடுபடுவது ஸ்டாலின் வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உருப்படியாக பயனுள்ள விவாதம் எதிலும் கலந்து கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தார். இன்று அவராக வெளியேறாவிட்டாலும், தனது செயல்பாடுகளால் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் வந்த ரத யாத்திரை: செங்கோட்டை எல்லையில் உற்சாக வரவேற்பு

ரத யாத்திரை வருவதையொட்டி செங்கோட்டையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். 
- 2026

ஆலங்குடி அருகே ஈ.வே.ரா. சிலை சேதம்: மர்ம நபர்களுக்கு போலீஸார் வலைவீச்சு!

ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில்  ஈ.வே.ரா., திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.

மொழிப்போர் நிகழ்வுகளை மறந்துவிட முடியாது: ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை கொண்டு செல்லப்படும் நடராஜன் உடல்; பரோலில் வருகிறார் சசிகலா..!

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனைக் கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்துள்ளதால், அந்த 6 மாத கால அளவு முடிவதற்கு இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன. எனவே விதிகளின் படி அவருக்கு பரோல் கிடைக்குமா?

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 19.3.2018 மாலை 6.00 மணி முதல் 23.3.2018 மாலை 6.00 மணி வரை 144 தடையுத்தரவு - மாவட்ட ஆட்சியர் . ...

இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பு-இ.ம.க. கோரிக்கை

தமிழகத்தில் இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுக்க - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய இராம இராஜ்ய இரத...

‘யலேய் டிரெஸ்ஸ கழட்டுல!’ மிரட்டும் ஆசிரியர்; பதுங்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

எலே கம்பெடுத்துட்டு வாங்க... எலேய் கழட்டுல... ஏ..நான் பெரிய ரவுடி தெரியுமால ..உனக்கு? ஏ..நீ என்ன பெரிய ரவுடியா? கழட்டுல.. கழட்டுல... மரியாதையா கழட்டு, கிழிச்சிருவேன் இல்லைன்னா... என்று அந்த ஆசிரியர் அந்த மாணவரை ஒதுக்குகிறார்... சுவர் ஓரமாக! பேசவே கூடாது, சொன்னபடி செய்யணும்... சரியா!
- 2026

Recent articles