February 21, 2026, 1:46 AM
26.7 C
Chennai

சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரி இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

rama gopalan - 2026

சென்னை: இந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப் பட்டதைக் கண்டித்தும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரியும் இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை சிக்கந்தர் சாவடி எனும் கந்தர் சாவடியில் விடுதலை சபை எனும் சட்ட விரோத ஜெபக்கூடத்தில் இந்து பெண் குழந்தைகளை அழைத்து சென்று ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து மெஸ்மரிஸம் செய்ய பயமுறுத்தியபோது, அக்குழந்தைகள் பயந்து, அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்போர் இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு உதவி கேட்டபோது, அங்கு சென்று அக்குழந்தைகளை விடுவித்தனர்.

இது குறித்து காவல்துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனை திசைத் திருப்பி, மதமாறிய மதிமுக வைகோ போன்றவர்களை அழைத்து வந்து, பைபிளை கொளுத்தியாக பொய் தகவலை ஊடகத்தில் கூற, அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சதீஷ், தினஷ் ஆகிய இருவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். அதனைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தின் உத்திரவின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இந்து விரோத அரசியல்வாதிகள், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது, சென்னையில் புதன்கிழமை (மார்ச் 21) நாளை காலை 10 மணி அளவில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இதற்குத் தலைமை தாங்குகிறார் மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன். மாநிலச் செயலாளர் த. மனோகரன், நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories