January 19, 2025, 8:56 AM
25.7 C
Chennai

சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரி இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: இந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப் பட்டதைக் கண்டித்தும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரியும் இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை சிக்கந்தர் சாவடி எனும் கந்தர் சாவடியில் விடுதலை சபை எனும் சட்ட விரோத ஜெபக்கூடத்தில் இந்து பெண் குழந்தைகளை அழைத்து சென்று ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து மெஸ்மரிஸம் செய்ய பயமுறுத்தியபோது, அக்குழந்தைகள் பயந்து, அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்போர் இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு உதவி கேட்டபோது, அங்கு சென்று அக்குழந்தைகளை விடுவித்தனர்.

இது குறித்து காவல்துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனை திசைத் திருப்பி, மதமாறிய மதிமுக வைகோ போன்றவர்களை அழைத்து வந்து, பைபிளை கொளுத்தியாக பொய் தகவலை ஊடகத்தில் கூற, அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சதீஷ், தினஷ் ஆகிய இருவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். அதனைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தின் உத்திரவின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இந்து விரோத அரசியல்வாதிகள், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ALSO READ:  டோலி.. டோலி... முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

இது, சென்னையில் புதன்கிழமை (மார்ச் 21) நாளை காலை 10 மணி அளவில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இதற்குத் தலைமை தாங்குகிறார் மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன். மாநிலச் செயலாளர் த. மனோகரன், நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.