கரூர் கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் சஷ்டி வழிபாடு!

Published:

karur kalyana subramaniar
karur kalyana subramaniar

கரூர் அருகே தொழிற்பேட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் சஷ்டி விரதத்தினையொட்டி மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு மகாதீபாராதனை சிறப்பாக நடைபெற்றது

கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை அருகே உள்ள ஆசிரியர் காலனியில் விற்று அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி விரதத்தினையொட்டி, மூலவர் முருகன் வள்ளி தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் அருள் பெற்றனர்.

Related articles

Recent articles

spot_img