ஓணம் பூஜை… சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

sabarimalai - 2026

பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள்  சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்தது. பம்பை செல்வதற்கான மாற்றுப் பாதை உள்ளிட்ட விவரங்களை, தேவசம் போர்டு வெளியிட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றம், இதற்கு அனுமதி மறுத்து விட்டது. சாலைகளை சரி செய்யும் வரை, சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

sabarimalai adi month - 2026

இதை அடுத்து ஓணம் பூஜைகளுக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்தார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல் 27ஆம் தேதி வரை, ஓண பூஜைகளும் வழக்கமான பூஜைகளும் நடைபெறும். 27ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் பூஜாரிகளும், குறைந்த அளவு ஊழியர்களும் மட்டுமே உள்ளனர். இதனால் சரண கோஷ முழக்கம் இன்றி, சபரிமலை அமைதியாக காணப்படுகிறது. அடுத்து புரட்டாசி மாத பூஜைகளுக்காக, செப்.16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும். அதற்கு முன் பம்பையில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

வரும் 28ஆம் தேதி தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. பம்பையை சீரமைக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் துவங்க இன்னும் 83 நாட்கள் உள்ளன. அதற்குள் தேவசம்போர்டு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதி, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்தாக வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories