ஓணம் பூஜை… சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

sabarimalai - 2026

பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள்  சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்தது. பம்பை செல்வதற்கான மாற்றுப் பாதை உள்ளிட்ட விவரங்களை, தேவசம் போர்டு வெளியிட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றம், இதற்கு அனுமதி மறுத்து விட்டது. சாலைகளை சரி செய்யும் வரை, சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

sabarimalai adi month - 2026

இதை அடுத்து ஓணம் பூஜைகளுக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்தார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல் 27ஆம் தேதி வரை, ஓண பூஜைகளும் வழக்கமான பூஜைகளும் நடைபெறும். 27ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் பூஜாரிகளும், குறைந்த அளவு ஊழியர்களும் மட்டுமே உள்ளனர். இதனால் சரண கோஷ முழக்கம் இன்றி, சபரிமலை அமைதியாக காணப்படுகிறது. அடுத்து புரட்டாசி மாத பூஜைகளுக்காக, செப்.16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும். அதற்கு முன் பம்பையில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

வரும் 28ஆம் தேதி தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. பம்பையை சீரமைக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் துவங்க இன்னும் 83 நாட்கள் உள்ளன. அதற்குள் தேவசம்போர்டு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதி, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்தாக வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories