ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து பலி..

8b401ee0 3a22 4757 abfc 1a0de83d908f - 2026
திருவப்பூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் துள்ளிய காளை

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவில் முறையான பாதுகாப்பு வசதி செய்யப்படாததால் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசு திருவிழாவை முன்னிட்டு இன்று கவிநாடு கண்மாய் அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது இதில் 900 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டார்கள் கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கண்மாயில் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட காளைகள் கலெக்ஷன் பாயிண்டிற்கு சென்று விட்டு பயந்து ஓடி கண்மாயில் விழுந்து செல்லும் அபாயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய்க்குள் விழுந்து திக்கு தெரியாமல் நீந்தி சென்றன.

உரிமையாளர்கள் அவற்றை மீட்பதற்கு பெரும் பாடு ஏற்பட்டது. பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்ற போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமல்லாது காளைகளின் உரிமையாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நிலையில் வெட்டன் விடுதி அருகே உள்ள கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது ஜல்லிக்கட்டு காளை ஒன்று கண்மாய் தண்ணீருக்குள் நீந்தி சென்றது.

பின்னர் நீரில் திக்குமுக்காடி திணறியது. வெளியே கரைக்கு வராமல் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கண்மாயில் காளை வெளியில் வர முடியாமல் தவித்த நிலையில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories