தமிழகத்தில் முதல் இன்புளுயன்சா உயிரிழப்பு..

viluppuram 12 16784644883x2 1 - 2026

தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545  பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எச்3என்2 என்ற இன்புளுயன்சா வகை காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இன்புளுயன்சா காய்ச்சலுக்கு நாடு முழுவதும் ஒரு சில உயிரிழப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை உயிரிழப்பு என்பது பூஜ்ஜிய நிலையில் இருந்தது. இதனிடையே திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த 27 வயது இளைஞர், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றுவிட்டு குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9ம் தேதி திருச்சிக்கு வந்துள்ளார்.

10ம் தேதி இளைஞருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல்நல கோளாறும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில மரபணு பகுப்பாய்வு மையத்தில் பரிசோதனை செய்ததில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா மற்றும் இன்புளுயன்சா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் இன்புளுயன்சா உயிரிழப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories