5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’!

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அரசியல் கட்சிகளின் சார்பில் 89 எம்எல்ஏக்கள் மீண்டும்
தமிழக சட்டப் பேரவை தேர்தலில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் சராசரியாக 4.35 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அவர்களின் சொத்து மதிப்பு சராசரி 8.63 கோடியாக அதிகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சொத்தின் மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் 51 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது 2016ஆம் ஆண்டில் 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
அதேபோல் முன்நாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011ஆம் ஆண்டில் 44 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது, நடப்பாண்டில் 62 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேமுதிகவின் 11 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 27 லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 15 லட்சம் ரூபாயும், பாமக 2 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ. 1 கோடியும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவின் சொத்து மதிப்பு சராசரியாக 3 கோடி ரூபாயும் உயர்ந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுகவின் 51 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும், திமுகவின் 16 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories