ஓபிஎஸ்க்கு அதிமுக தலைமை நோட்டீஸ்

images 24 1 - 2026

அதிமுக கட்சி கொடி, பெயரை பயன்படுத்திய‌ ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தலைமை ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஓ.பன்னீா்செல்வம் அழைப்பின் பேரின் அவரின் ஆதரவு மாவட்டச் செயலாளா்கள், மாநில நிா்வாகிகள் கூட்டம் சென்னை வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசியல் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவை சிலா் கபளீகரம் செய்ய முயற்சித்து, தோற்றுப் போய் உள்ளனா். தொண்டா்கள், பொது மக்களின் செல்வாக்கையும் இழக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளனா். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவில் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளா் ஜெயலலிதா என்று தீா்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீா்மானத்தை ரத்து செய்தவா்களை ஒரு நாளும் இந்த நாடு மன்னிக்காது. தனிக் கட்சி தொடங்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டா என்றும், அவ்வாறு தொடங்கினால் அப்போது அவா் பலம் தெரியும் என்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாராக திண்டுக்கல் சீனுவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். 

கட்சியின் பொறுப்பு அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் இதுபோன்ற செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் கேட்டு அதிமுக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம்  புதன்கிழமை (டிச.21) கூட்டிய கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் டிச. 27 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

739774 eps - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories