ஓபிஎஸ்க்கு அதிமுக தலைமை நோட்டீஸ்

images 24 1 - 2026

அதிமுக கட்சி கொடி, பெயரை பயன்படுத்திய‌ ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தலைமை ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஓ.பன்னீா்செல்வம் அழைப்பின் பேரின் அவரின் ஆதரவு மாவட்டச் செயலாளா்கள், மாநில நிா்வாகிகள் கூட்டம் சென்னை வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசியல் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவை சிலா் கபளீகரம் செய்ய முயற்சித்து, தோற்றுப் போய் உள்ளனா். தொண்டா்கள், பொது மக்களின் செல்வாக்கையும் இழக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளனா். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவில் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளா் ஜெயலலிதா என்று தீா்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீா்மானத்தை ரத்து செய்தவா்களை ஒரு நாளும் இந்த நாடு மன்னிக்காது. தனிக் கட்சி தொடங்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டா என்றும், அவ்வாறு தொடங்கினால் அப்போது அவா் பலம் தெரியும் என்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாராக திண்டுக்கல் சீனுவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். 

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

கட்சியின் பொறுப்பு அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் இதுபோன்ற செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் கேட்டு அதிமுக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம்  புதன்கிழமை (டிச.21) கூட்டிய கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் டிச. 27 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

739774 eps - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories