ஆதி திராவிடர் நல நிதி 4000 கோடியை வீணடித்துள்ளது திமுக அரசு: அண்ணாமலை பகீர்!

Annamalai
K.Annamalai

‘ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கிய நிதியை முழுதும் பயன்படுத்தாமல் இருப்பது, தி.மு.க., அரசின் மெத்தனத்தையும், பின் தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான அலட்சிய போக்கையும் காட்டுகிறது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

சமூகத்தில் பின் தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில், 100க்கும் மேற்பட்டோர், எப்படியாவது சமூகத்தில் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க ஆண்டுதோறும் சென்னை வருகின்றனர். அவர்கள், தமிழக அரசின் ஆதிதிராவிட நல துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அடிப்படை வசதிக்கே போராட வேண்டிய அவல நிலை உள்ளது. வசதிகள் இல்லை : 

கடந்த மழை காலத்தில், மழை நீர், விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் துாங்க இடம் இல்லாமலும், நோய் தொற்றுக்கும் உள்ளாகினர். விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை. துறையின் சார்பில், 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில், 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 

கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட, 4,099 கோடி ரூபாய் நிதியை வீணடித்துள்ளனர்; ஊழியர்களுக்கு மட்டும், 757 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு, தி.மு.க., அரசு பதில் அளிக்க வேண்டும். ஒதுக்கிய நிதியை முழுதும் பயன்படுத்தாமல் இருப்பது, அரசின் மெத்தனத்தையும், சமூகத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது. 

ஆனால், அரசியல் மேடைகளில் சமூக நீதி நாடகத்தை அரங்கேற்றுவது, தி.மு.க.,வின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, அரசு, ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனே மீண்டும் துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படை தேவைகளையும், கல்வி, நுாலகம் உள்ளிட்ட இதர பணிகளையும் உடனே மேற்கொள்ள வேண்டும். என்று அவர் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories