ஏப்.14-ல்  திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம் தொடங்க திட்டம்..

ஏப்.14-ல்  திருச்செந்தூரில்இருந்துஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடையே எடுத்துச் செல்லும் விதத்தில் நடைபயணம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கடலூரில் நடந்த பாஜக கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

931946 - 2026
கடலூரில் நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசும் கட்சித் தலைவர் அண்ணாமலை. அருகில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்

ஆளுநர் விவகாரத்தில் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடலூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபயணம் தொடங்க இருப்பதாக கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் பி.செல்வம், பொருளாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்: உலகின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் நாடாக இந்தியாவை உருவாக்கி பெருமை சேர்த்ததற்கும், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தியதற்கும் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் சாசன வரம்பை மீறி, ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நடந்த அராஜகத்தை கண்டிக்கிறோம். ‘தமிழ்நாடு’ என்பதைவிட ‘தமிழகம்’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு விழாவில் ஆளுநர் பேசியதை திசைதிருப்பி, மொழி அரசியலை முன்னெடுத்து ஆளுநரை அவதூறு செய்ததையும் செயற்குழு கண்டிக்கிறது. தொடர்ந்து திட்டமிட்டு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக பேச்சாளர் மூலம் ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததோடு. ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததையும், ‘சட்டப்பேரவையில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை’ என்று கூறி, பேரவையின் கண்ணியத்தை குலைத்து, ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை இன்னும் கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டிக்கிறோம்.

தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக செயற்குழு வலியுறுத்துகிறது.
‘தமிழகம்’, ‘தமிழ்நாடு’ என்ற விவகாரத்தை பெரிதாக்கி, மொழி ரீதியான பதற்றத்தை உருவாக்க முனைந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ராமர் பாலம் பாதிக்கப்படாமல், சேது கால்வாய் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தமிழக விவசாயிகள், நெசவாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தமிழக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒன்றியம், பகுதி வாரியாக விளக்க தமிழக பாஜக தலைவர் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாலையில் இக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘பிரதமர் மோடியின் நலத் திட்டங்கள் மற்றும் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் விதத்தில் ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபயணம் தொடங்க இருக்கிறேன். இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

இதுபற்றி பாஜக வட்டாரங்களில் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் ஊழலை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையிலும் அண்ணாமலையின் நடைபயணம் அமையும். ஏப்.14-ம்
தேதி சித்திரை முதல் நாளில் அவரது பயணத்தை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது’’ என்றனர். திருச்செந்தூரில் அவர் பயணத்தை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories