ஈரோடு தேர்தல் பிரச்சாரம் -இது செல்லூர் ராஜூ ஸ்டைலுங்க

நடிகர்களுக்கு கூட கூட்டம் கூடும். ஆனால், யாரும் ஓட்டு போடமாட்டார்கள். அதுபோல கமல்ஹாசனை பார்க்க வருபவர்கள், அவர் ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என வாக்காளர்கள் மத்தியில் அமர்ந்து செல்லூர் ராஜூ திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

946871 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று  பிரச்சாரம் மேற்கொண்டார். அண்ணாமலை பிள்ளை வீதியில் உள்ள பெண் வாக்காளர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடிய நிலையில், அவர்கள் மத்தியில் அமர்ந்து செல்லூர் ராஜூ திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டது குறித்தும் திண்ணை பிரச்சாரத்தில் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூவிடம், நடிகர் கமல்ஹாசனின் பிரச்சாரம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: நாடு பாதுகாப்பற்ற தன்மையில் இருப்பதால், திமுக கூட்டணியை ஆதரிப்பதாக நேற்றைய பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இன்று நாட்டில் பதட்டமான சூழ்நிலை இருக்கா? இந்த ஒரு தேர்தலால் பெரிய மாற்றம் வந்துவிடுமா? ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் பேசியுள்ளார்.

நடிகர் பிரச்சாரத்திற்கு வந்தால் அவரைப் பார்க்க கூட்டம் கூடும். அவர் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். முந்தானை முடிச்சு படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களையை கூட்டிகிட்டு நாங்கள் ஓட்டு கேட்டபோது பெரும் கூட்டம் கூடியது. அவங்க தவக்களையை பார்த்தார்களே தவிர ஓட்டு போடவில்லை. அதேபோல குஷ்பு, வடிவேலு பிரச்சாரத்துக்கு வந்து ஓட்டு கேட்டாங்க.ஆனால், யாரும் ஓட்டு போடலை.

ஈரோடு மக்கள் விபரமானவங்க. எதையும் ஆராய்ந்து பார்க்கிறவங்க. எனவே, நல்ல தீர்ப்பை இந்த மக்கள் தருவார்கள். இந்த ஆட்சி வந்ததும் பல கட்டணங்களை உயர்த்தியுள்ளனர்.

மின்சாரம் ஒழுங்காக வரலை. ஆனால், மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். விலைவாசி உயர்ந்து விட்டது. ரேஷனில் பொருட்கள் கிடைப்பதில்லை என திண்ணை பிரச்சாரத்தில் மக்கள் என்னிடம் நேரடியாகச் சொல்கிறார்கள்.

ஈரோடு வாக்காளர்கள் விபரமானவர்கள். அவர்களை சரியான தீர்ப்பு வழங்குவார்கள். அதிமுக தொண்டர்கள் எழுச்சியாக தேர்தல் பணி ஆற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories