December 5, 2025, 8:42 PM
26.7 C
Chennai

பெருமைக்காக கும்பாபிஷேகம் அரைகுறையாகச் செய்வது கண்டிக்கத் தக்கது!

kadeswara subramaniam hindu munnani - 2025

அரசின் பெருமைக்காக கோவில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது… என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல கோவில்களில் திருப்பணிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரைகுறையாக பணிகள் செய்ததால் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பல கோவில்கள் பழுதடைந்ததைப் பார்க்கிறோம்.

குறிப்பாக உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. இந்து முன்னணி அதனைக் கண்டித்தது. சமீபத்தில் நடைபெற்ற பல கோவில் கும்பாபிஷேகங்களில் இதே பிரச்சினை தலை தூக்கியது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திலும் பிரச்சினை தலைதூக்கியது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கோவில் திருப்பணி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது ஆகும். எனவே பழம்பெரும் கோவில்களில் அதற்கு ஏற்ப திருப்பணிகள் செவ்வனே செய்யப்பட வேண்டும்.

பக்தர்கள் காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். அப்படி இருந்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர், அரசியல்வாதிகள் அதனை சுருட்டி ஊழல் செய்வதில் தங்களது திறமையைக் காட்டுகிறார்கள்.

தென்காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக செலவுத்திட்டமாக ஒரு கோடியே 67 லட்சத்து ஐம்பதாயிரம் (1,67,50,000) ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். இதில் பூமாலை ரூ15 லட்சம், குப்பை அள்ள சம்பளம் 2.5 லட்சம், சிவாச்சியார், உபயதாரர் சாப்பாடு 3 லட்சம் (அன்னதானம் தனி) என இஷ்டத்திற்கு கணக்கு காட்டுகிறார்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் பணியில் அலட்சியத்தை சுட்டிக் காட்டிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கு 300 கோடியில் கட்டப்பட்டு வரும் மண்டபம் அதன் தடுப்புச்சாரத்தை நீக்கியவுடன் விழுந்து விட்டது.

இத்தகைய செயல்பாடுகள் வெளிப்பட்ட போதும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவோ, அதிகாரிகளோ சிறிதும் வெட்கமின்றி அமைதி காக்கின்றனர். கும்பாபிஷேகம் தடை படுவது வேதனையானது. ஆனால் முறையான திருப்பணி முடிக்காமல் கும்பாபிஷேகம் செய்வது அநியாயமாகும்.

எனவே தமிழக முதல்வர் இத்தனை ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது என்று தற்பெருமை பேசுவதை விடுத்து, கோவில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories