அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

modi in meeting operation sindoor - 2026

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!

“மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.” -என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” “உறுதியளிக்கின்றோம்” என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.

இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.

இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல… மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.

  • செய்திக்கதிர் குழுவில் ஜி.எஸ். பாலமுருகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories