ஆலயச் சொத்துகளை அபகரிக்கும் சதி!

sekharbabu with stalin - 2026
#image_title

கோயில் இடங்களில் கல்லூரிகள் கட்டலாம் என தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவுக்கு, இந்து கோவில்களின் சொத்துக்களை அபகரிக்க சதி செய்வதாக, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

கோவில் இடங்களில் கல்லூரி துவங்க தமிழக அரசு மசோதா தாக்கல் செய்து அவசரம் அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

ஒரே நாளில் 16 மசோதாக்கள் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்டதே ஜனநாயக கேலிக் கூத்து. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் சதியை அதிமுக எம்ஏல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டித்து எதிர்த்துள்ளார். அவரை இந்து முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.

நீதிமன்றம் பலமுறை கோவில் சொத்துகள், நிதி, கோவில் இடங்கள் ஆகியன கோவிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய பிறகும், திமுக அரசு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் நிதி, தங்கம், இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. விஞ்ஞானப்பூர்வமான ஊழலில் கைதேர்ந்தது திமுக என்று நீதியரசர் சர்காரியா தெரிவித்த கருத்து இன்றும் மிகப் பொருத்தமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்வதில் திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது? சனாதன இந்து தர்மத்தை அழிப்பதே எங்கள் கொள்கை என்று துணை முதல்வரான உதயநிதி கூறினார். அதனை அருகில் இருந்து கைதட்டி வரவேற்றவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்த கொள்கையை மறைமுகமாக நிறைவேற்றவே கோவில் சொத்துக்களை அழிக்க இத்தகைய திட்டங்களை வகுக்கிறார் என இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

கோவில் இடங்கள், நிதி ஆகியவற்றை ஒழித்துவிட்டால் தற்போது பல்லாயிரம் கோவிலில் விளக்கு ஏற்ற, வழிபாட்டிற்கு வழியில்லாமல் பாழடைந்து பூட்டி கிடப்பதை போல் பிரபல கோவில்களின் நிலையை ஏற்படுத்திடவே இத்தகைய திட்டங்களை மக்கள் நலன் என்ற போர்வையில் சட்டசபையில் அமைச்சர் மசோதாவை நிறைவேற்றியுள்ளார்.

தங்களது செயல்பாட்டினை மூடி மறைக்க இசைக் கல்லூரி, வேத பாராயணம் நடத்தவும் என அதில் கண்துடைப்பாக சேர்த்துள்ளனர். இந்துக்கள் ஏமாளிகள் என்ற நினைப்பிலும், நீதிமன்றத்தின் கவனத்தை திசைத்திருப்பவும் இந்த வார்த்தைகளை சேர்த்து கபட நாடகம் ஆடுகிறது திமுக அரசு.

இந்த மசோதா சட்டவிரோதமானது. இதனை தமிழக ஆளுநர் ஏற்கக்கூடாது என்று இந்து முன்னணியின் சட்டக்குழு, மேதகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து மனு அளிக்கும்.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள இந்து கோவில் இடங்களில் கல்லூரி கட்ட அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசின் இந்த சதியை தமிழக இந்துக்கள் புரிந்து எதிர்க்கவும், சிவனடியார் முதலான இந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Entertainment News

Popular Categories