
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பத்தாவது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதீஷ் குமார்.
பீகார் மாநில சட்டசபைத் தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும், நிதிஷ் குமாா் முதலமைச்சராகத் தொடா்வார் என்பதை தேஜ.,கூட்டணி உறுதியுடன் கூறியது. பாஜக., தலைமையும் இதனை முடிவு செய்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில் பீகார் தே.ஜ.கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா். அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா்.
இந்நிலையில் இன்று, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சராக 10வது முறையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேஜ.,கூட்டணியின் மூத்த தலைவா்கள் கலந்து கொண்டனர்.





