புலி வருது புலி வருது…ன்னு ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியர்! 3 மணி நேரம் கஷ்டப் பட்டு பிடிச்சா… அது… :)

Published:

cat panther - 2026

புலி வருது புலி வருது என்று பூனையைப் பார்த்து விட்டு கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுப் பூனை ஒன்று தான், ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலைய ஊழியரை இப்படி வியர்க்க விறுவிறுக்க பிடறி தெறிக்க ஓட வைத்தது. பூனையைப் பார்த்து விட்டு, சிறுத்தைப் புலி என்று எண்ணி ஊழியர் அப்படி ஓட்டம் ஓட்டமாக ஓடினாராம்!

புலி குறித்த செய்தி கிடைத்த உடனே வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன விலங்கு சரணாலய ஊழியர்கள் களத்தில் இறங்கினர். 3 மணி நேரம் சல்லடை போட்டுத் தேடி, போராடி அதனை சிறைப் பிடித்தனர்.

ஆனால் அது புலியல்ல. காட்டுப் பூனை என்று அதிகாரிகள் கண்டறிந்த பின்னரே… அனைவருக்கும் அப்பாடா என்று உயிர் வந்தது.

சம்ஷாபாத் விமான நிலைய ஏரோ டவர்ஸ் அருகில் நடந்த இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் சுவாரஸ்யமாக பகிரப் பட்டது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img