ரூ10 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் எதிர்த்து அழிப்பு..

IMG 20221018 WA0105 - 2026

தென் மண்டலம் அளவிலான காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 10 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் எதிர்த்து அழிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அ.முக்குளம் உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையில் தென் மண்டல பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தமிழக போலீசாரால் ஆப்ரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.

IMG 20221018 WA0108 - 2026

தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஸ்குமார் அகர்வால் தலைமையிலும், மதுரை சரக டிஜஜி பொன்னி, திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர், மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத், திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன், திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன், நரிக்குடி காவல் ஆய்வாளர் ராமநாராயணன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 980 கிலோ எடை கொண்ட சுமார் 10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை எரித்து அழிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஸ்குமார் அகர்வால் கூறியதாவது,

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் போதையில்லாத தமிகத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் போலீசாரால் போதை ஒழிப்பு சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்கபட்டது. இதில் குறிப்பாக ஆப்ரேஷன் 2.0 கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தமிழக முழுவதும் 21 ஆயிரம் கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது என்றார். கஞ்சா விற்றவர்களை பிடித்து முறையாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 16 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பாதுகாக்கவும், அதை முழுமையாக அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தென் மண்டல பகுதிகளான மதுரை திண்டுகல், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிடிக்கப்பட்ட சுமார் 1000 கிலோ கஞ்சாவை விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மருத்துவ கழிவு எரிக்கும் ஆலையில் வைத்து அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.

IMG 20221018 WA0107 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories