குஜராத்தில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும்-பாஜக தேர்தல் அறிக்கை..

அன்னபூர்ணா உணவகம்’ என்ற பெயரில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதேபோல், தேர்தல் அறிக்கைகளையும் அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:-

நாட்டுக்கு எதிராக செயல்படும் குழுக்கள், தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள், நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை கண்டறிந்து அழிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்.

குஜராத்தில் பொதுசிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். ரூ. 10 ஆயிரம் கோடியில் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் .ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களை கண்டறிந்து அழிக்க பயங்கரவாத தடுப்பு அமைப்பு உருவாக்கப்படும் அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும். குஜராத்தில் மூத்த குடிமக்களுக்கு (பெண்கள் மட்டும்) இலவச பஸ் பயண வசதி வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி முதல் முதுகலை வரை பயில இலவச கல்வி வழங்கப்படும் .

குஜராத் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) போன்று குஜராத் தொழில்நுட்ப கழகம் உருவாக்கப்படும். ‘அன்னபூர்ணா உணவகம்’ என்ற பெயரில் மாநிலத்தில் 100 இடங்களில் உணவகம் உருவாக்கப்படும். இந்த உணவகத்தில் தலா 5 ரூபாய்க்கு 3 வேலையும் உணவு வழங்கப்படும்’ உள்பட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.

FB IMG 1669521828214 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories