December 5, 2025, 9:55 PM
26.6 C
Chennai

ராஜபாளையம் உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு மரியாதை..

IMG 20231010 WA0172 - 2025
#image_title

ராஜபாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு அரசு சார்பில், ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி இறுதி மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி சாலை விபத்தில் சிக்கிய இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் மூளை சாவு அடைந்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உறவினர்கள் சம்மதத்துடன் இவரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பு படி இவரது உடலுக்கு இன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

உயிரிழந்த மாரியப்பனின் உடல் இன்று பிற்பகல் 3 மணி அளவில் அவரது சொந்த ஊரான முகவூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டின் முன்புறம் அவசர ஊர்தியில் வைக்கப்பட்டபடி மாரியப்பன் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

பின்னர் அவரது உடல் தகனத்திற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ப்ரீத்தி, சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர் மாலை வைத்தும் அரசு மரியாதை செலுத்தினர்.

இறந்த மாரியப்பனின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் 2 வதாக திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் 3 குழந்தைகளும் வாலிப வயதில் இருக்கும் நிலையில், இரண்டாவது மனைவியின் 3 குழந்தைகளும் 5 வயதுக்கு உட்டபட்ட சிறுவர்களாக உள்ளனர்.

எனவே குழந்தைகளின் படிப்புக்கும், மனைவியின் வாழ்வாதாரத்திற்கும் அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என மாரியப்பனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories