December 8, 2025, 5:15 AM
22.9 C
Chennai

ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில்! ஆனா தென்காசி செங்கோட்டை பயணிகளுக்கு ஏமாற்றம்!

train - 2025
#image_title

திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் இருந்து பயணத்தை துவக்கி திருநெல்வேலியில் முடிக்கும் ஆனால் இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பயணத்தை முடிக்கிறது.

இதன்படி நவம்பர் 9 அன்று சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் – நாகர்கோவில் ஒரு வழி தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06061) நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

நாகர்கோவில் – பெங்களூரு – நாகர்கோவில் சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் – பெங்களூர் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் (06083) நவம்பர் 7, 14, 21 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பெங்களூரு – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06084) நவம்பர் 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பெங்களூரிலிருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்கார பேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்ட்டோண்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

நெல்லை நாகர்கோயில் பெங்களூர் மங்களூரு என பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி சிறப்பு ரயில் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில் அதிக மக்கள் பயணிகள் பயணம் செய்யும் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில் தென்காசி செங்கோட்டை க்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்படாததால் தென்காசி விருதுநகர் மாவட்டம் மற்றும் கேரள பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் ஏமாற்ற மடைந்த தென்காசி செங்கோட்டை பயணிகளை கவனத்தில் கொண்டு சென்னை செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்குவது அவசியமாகும்.

மேலும் கூடுதல் தீபாவளி ஸ்பெஷல் ரயில் சென்னை எக்மோர் To திருநெல்வேலி வரை ரயில் எண் 06069_06070 விழுப்புரம் மாயவரம் திருவாரூர் காரைக்குடி மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருத்துறைபூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை போராவூரணி அறந்தாங்கி காரைக்குடி நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

கிழக்கு கடற்கரை இரயில் நிலைய பயணிகள் இந்த ரயிலில் முன்பதிவு செய்தும் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்.

சென்னை எக்மோர் புறப்படும் தேதி நவம்பர் 10–17 — 24 நேரம் மதியம் 3.00 மணி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் தேதி நவம்பர்-9–16 —.23 நேரம் மாலை 6.45 மணியாகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories