
திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் இருந்து பயணத்தை துவக்கி திருநெல்வேலியில் முடிக்கும் ஆனால் இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பயணத்தை முடிக்கிறது.
இதன்படி நவம்பர் 9 அன்று சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம் – நாகர்கோவில் ஒரு வழி தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06061) நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
நாகர்கோவில் – பெங்களூரு – நாகர்கோவில் சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் – பெங்களூர் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் (06083) நவம்பர் 7, 14, 21 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் பெங்களூரு – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06084) நவம்பர் 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பெங்களூரிலிருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்கார பேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்ட்டோண்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
நெல்லை நாகர்கோயில் பெங்களூர் மங்களூரு என பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி சிறப்பு ரயில் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில் அதிக மக்கள் பயணிகள் பயணம் செய்யும் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில் தென்காசி செங்கோட்டை க்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்படாததால் தென்காசி விருதுநகர் மாவட்டம் மற்றும் கேரள பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.
ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் ஏமாற்ற மடைந்த தென்காசி செங்கோட்டை பயணிகளை கவனத்தில் கொண்டு சென்னை செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்குவது அவசியமாகும்.
மேலும் கூடுதல் தீபாவளி ஸ்பெஷல் ரயில் சென்னை எக்மோர் To திருநெல்வேலி வரை ரயில் எண் 06069_06070 விழுப்புரம் மாயவரம் திருவாரூர் காரைக்குடி மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருத்துறைபூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை போராவூரணி அறந்தாங்கி காரைக்குடி நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு கடற்கரை இரயில் நிலைய பயணிகள் இந்த ரயிலில் முன்பதிவு செய்தும் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்.
சென்னை எக்மோர் புறப்படும் தேதி நவம்பர் 10–17 — 24 நேரம் மதியம் 3.00 மணி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் தேதி நவம்பர்-9–16 —.23 நேரம் மாலை 6.45 மணியாகும்