விகடன் நிருபர் ஜோ.ஸ்டாலினுக்காக போலீஸிடம் வக்காலத்து வாங்கிய தமிழன் பிரசன்னாவின் குரல் பதிவு!

jo stalin vikatan prasanna - 2026

சென்னை: ஊடக உலகில் பெண் விடுதலை என்றும் பெண்ணியம் குறித்தும் பேசும் சிலர், பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்!

சென்னையில் பேராசிரியை ஒருவருக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் 2 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த மீம்ஸ் புகழ் தமிழன் பிரசன்னா கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரிய விவகாரம் ஆகியுள்ளது.

புகார் கொடுத்துள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி பேராசிரியை, விகடன் நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளர் ஜோ.ஸ்டாலினுடன்  நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சில பிரச்னைகளால் நட்பை துண்டித்துள்ளார்

இதனை அடுத்து, நாளிதழ் நிருபர் ஒருவர் பேஸ்புக் மூலம் அந்த பேராசிரியைக்கு பழக்கமாகியுள்ளார். மேலும் அந்த பேராசிரியை உடன் பழகி வந்துள்ளார். ஒருமுறை பேராசிரியை வீட்டுக்கே சென்று விட்டதால், நாளிதழ் நிருபருடன் பேசுவதை பேராசிரியை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாளிதழ் நிருபருடன் பேராசிரியைக்கு நேர்ந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமாகி பின்னர் நட்பு துண்டிக்கப்பட்ட மற்றொரு நிருபருக்கு தெரியவந்துள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

முதலில் பழகிய நிருபர், அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், பழகியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனால் பேராசிரியை, சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு நிருபர்களுக்கும் எதிராக புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக நிருபர்களை விசாரணைக்கு அழைத்துள்ளார் திருமங்கலம் காவல் ஆய்வாளர். ஆனால் இருவரும் விசாரணைக்கு வரவில்லை. மாறாக தி.மு.க செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு காவல் ஆய்வாளருக்கு வந்திருக்கிறது.

அப்போது ஆய்வாளரிடம் பேசிய தமிழன் பிரசன்னா, சார்… இது குடும்ப பிரச்சனை, நாளிதழ் நிருபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை வேறு சம்பந்தப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம், நிருபருக்கு மேலிடத் தொடர்புகள் இருக்கிறது, வி.ஐ.பிக்கள் பலருக்கு நெருக்கமானவர்கள், எனவே வழக்குப் பதிவு செய்யாதீர்கள் என்று மிரட்டலாக பேசிய தமிழன் பிரசன்னா தான் அறிவாலய வழக்கறிஞர் பேசுகிறேன் எனவும், அதிகாரத் தோரணையில் பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி, திமுகவின் பெயரையும் ஆய்வாளருக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆய்வாளர் சற்று பின்வாங்கி இருந்திருக்கிறார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

ஆனால் பேராசிரியையின் சகோதரரோ ஊடக தொடர்பு உள்ள நபராக இருந்ததால், விடாமல் இந்த வழக்கை முன்னெடுத்து சென்றிருக்கிறார். இதனால் அவர் தனது ஊடக நண்பர்கள் மூலமாக திருமங்கலம் ஆய்வாளரிடம் பேச வேறு வழியில்லாமல் நிரூபர்களுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டு இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் விவகாரம் என்னவென்றால், தமிழன் பிரசன்னா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக பேசியது!

இப்போது தமிழன் பிரசன்னா காவல் நிலையத்துக்கு போன் செய்து மிரட்டும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த ஆடியோ பதிவு ….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories