நாத்திகன்னா எனக்கு கருணாநிதி ஞாபகம்தானே சார் வருது…!

cho ramaswamy2 - 2026

நான் ஒரு நாத்திகன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் பிறப்பால் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பது பலருக்கு தெரியாது. ஜோசப் விஜய் மாதிரி நான் ஜோசப் இதயா.

எனது குழந்தைகளுக்கு கிரண், பிரதீப் என்கிற பொதுவான பெயர்களை வைத்தாலும் ஸ்கூலில் த/பெ. ஜோசப் என்று கிறிஸ்தவ பெயர் வருவதை நான் விரும்பவில்லை. எனவே என் பெயரை எஸ்.ஜே.இதயா என்று கெசெட்டில் மாற்றினேன்.

இந்த பெயர் மாற்றத்திற்காக நான் சென்னை வந்த போது, (அப்போது சென்னையில் மட்டும்தான் பண்ண முடியும்.) சோ ஸாரிடம் நான் வாங்காத திட்டு இல்லை. ”சுத்த பைத்தியக்காரத்தனம்” என்று பகிரங்கமாக திட்டினார். “உங்கப்பா, அம்மா எவ்வளவு ஆசையாக உங்களுக்கு பெயர் வைத்திருப்பார்கள்? இப்போது அவர்கள் வைத்த பெயரை மாற்றினால் அவர்கள் மனதை நோகடித்த மாதிரி ஆகாதா? அவர்கள் தங்கள் பிள்ளையை நினைத்து மனம் வருந்த மாட்டார்களா?” என்று கேட்டார்.

ஆனாலும் நான் பிடிவாதமாக என் பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனாலும் அதற்காக அவர் என்னை நேசிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை.

அவ்வப்போது கிறிஸ்தவ மதம் குறித்து ஏதாவது ஐயம் எழுந்தால் சோ ஸார் எனக்கு ஃபோன் பண்ணுவார். ஒருமுறை அப்படித்தான்.. “ரம்ஜான் நேரத்தில் முஸ்லீம்கள் விரதம் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். கிறிஸ்தவர்களும் அது போல் விரதம் இருப்பார்களாமே..?” என்று கேட்டார்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

நானும் “ஆமாம் சார். சாம்பல் புதன் (ஆஷ் வெனஸ்டே) முதல் புனித வெள்ளி (குட் ஃப்ரைடே) வரை விரதம் இருப்பதுண்டு. சிலர் நாற்பது நாட்களும் காலையில் விரதம் இருப்பார்கள். சிலர் சபரிமலைக்கு மாலை போடுவது போன்று அசைவமும், மதுவும் தவிர்ப்பார்கள்” என்றெல்லாம் விளக்கம் கொடுத்தேன்.

எல்லா விளக்கத்தையும் கேட்டுக் கொண்டு ஃபோனை வைக்கும் போது “எனக்கும் இந்த கிறிஸ்தவ மதத்திற்கும் வந்த கெட்ட நேரத்தைப் பார்த்தீங்களா ஸார்? இதையெல்லாம் உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.” என்றாரே பார்க்கலாம். எனக்கு சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆயிற்று.

இன்னொரு முறை- சிதம்பரத்தில் தி.மு.க. அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே பிரச்னை வெடித்த போது சோ ஸார் என்னை ஃபோனில் அழைத்து, “நீங்க உடனே சிதம்பரம் போய் என்ன, ஏதுன்னு விசாரிச்சு ஒரு மேட்டர் பண்ணிடுங்க” என்றார்.
எனக்கு பேரதிர்ச்சி.

“ஸார் இது சாமி விவகாரம். எனக்கு சர்ச் பத்தி கேட்டாலே ஒண்ணும் தெரியாது. இந்த தீட்சிகர் விவகாரத்தில் எனக்கு இம்மியளவும் ஐடியா இல்லை. நான் சுத்தமாய் ஜீரோ..” என்றேன்.

உடனே இடைமறித்த அவர், “அதனாலதான் உங்களை அனுப்புறேன். போய் ஜீரோவில் இருந்து ஆரம்பிங்க” என்று உத்திரவிட்டு விட்டார்.

நான் தென் தமிழக நிருபராக இருந்தாலும், வட மாவட்டமான சிதம்பரத்திற்கு மட்டுமில்லை; குஜராத் (இருமுறை), பீஹார், மலேஷியா, இலங்கை ஆகிய ஊர்களுக்கும் ரிப்போர்ட் எடுக்க அனுப்பி என்னை கௌரவித்தார். நான் நாத்திகனாய் இருந்தாலும் என்னை வெறுக்காமல், ஒரு தந்தையைப் போல் நேசித்தார் என்பதற்காக இதைச் சொல்கிறேன். (பிற்பாடு நான் எழுதிய சிதம்பரம் கோவில் தொடர்பான ரிப்போர்ட்டை, ஐந்து பக்கம் வந்தாலும் பரவாயில்லை என்று கொஞ்சமும் எடிட் பண்ணாமல் பிரசுரித்தார்.)

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இந்த நாத்திகம் சம்பந்தமான இன்னொரு சம்பவமும் உள்ளது. ஒருமுறை நான் சோ ஸாரை பார்க்க போனது போது அவர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். நானும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பகுத்தறிவு குறித்து ஏதோ ஒரு கேள்வி வந்தது. “கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது கடவுள் தண்டிப்பாரோ என்ற பயத்தில் ஊழல் செய்ய கொஞ்சம் தயக்கம் வரும். நாத்திகனாய் இருந்தால் இன்னும் சௌகர்யம். எந்த பயமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் திருடலாம்” என்கிற ரீதியில் அதற்கு பதிலளித்தார் அவர்.

பேட்டி முடிந்ததும், “எப்படி ஸார் இருந்துச்சு?” என்று என்னிடம் கேட்டார்.

“நல்லா இருந்துச்சு ஸார். ஆனால் அந்த கடைசி கேள்விக்குரிய பதிலில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நான் நாத்திகன்தான். ஆனால் எத்தனையோ பக்திமான்களை விட நான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க முயல்கிறேன்” என்றேன்.

உடனே “ஸாரி ஸார்.. ” என்ற சோ ஸார், “என்ன பண்ணித் தொலைக்க? நாத்திகன்னு சொன்னப்போ எனக்கு உங்க ஞாபகம் வரலையே.. கருணாநிதி ஞாபகம்தான் வந்துச்சு” என்றாரே பார்க்கலாம்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

எனக்கு வருத்தம் மீறி சிரிப்பு வெடித்து விட்டது.

பின் குறிப்பு: 27.10.2015 அன்று சோ ஸார் பற்றி நான் போட்ட ஃபேஸ்புக் பதிவை இப்படி முடித்திருந்தேன்.

//ஒரு தீவிரமான பக்திமான்; நான் ஒரு நாத்திகன் என்று தெரிந்தும் 18 வருடமாய் என்னை வேலைக்கு வைத்துள்ளார். பக்தி பற்றி எனக்கு அவர் சொன்ன புத்திமதிகள் ஏராளம். கேட்கவே கேட்காத இந்த நாதாரியை இன்று வரை ஒதுக்கி வைக்காத தெய்வம் அவர். சோ ஸார்.. நீங்கள்தான் தெய்வம் என்றால் இன்றே நான் ஆத்திகன் ஆக ரெடி! ஏ தெய்வமே.. நீ தான் நிஜம் என்றால், என் ஆயுளை எடுத்து என் குருவுக்கு அளி!//

இதே நாளில் துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தபோது துக்ளக் நிருபர் எஸ்.ஜே.இதயா எழுதியது…

3 COMMENTS

  1. Ccஅருமை. அன்புக்கும் நேர்மைக்கும் ததமில்லை. ஆனால. கடவுளை உணரலாம் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories