இவர்கள் கலைஞர் டிவி.,க்கு எதிராக நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவார்களா?

anna arivalayam - 2026

இவர்கள் கலைஞர் டிவி க்கு எதிராக போராட முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் ஒருவர் … அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தோழர்களுக்கு வணக்கம்!

கலைஞர் டிவி தொடங்கப்பட்டதில் இருந்து தலைமை நிருபராக பொறுப்பு வகித்தவர் கண்ணன். ஒரு விபத்தில் கண்ணனுடைய மனைவி இறந்து விட்டார். தோழர் கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு சில பத்திரிகையாளர்கள் உதவி செய்தார்கள். அவர் ஒரு உண்மை ஊழியர் என்பதை பலரும் அறிவர்.

ஆனால், கலைஞர் டிவியின் நிர்வாகம், கண்ணனை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு ஆளாக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா கடிதமும் கொடுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து கலைஞர் டிவி பணியாளர்களுக்கும், இணை ஆசிரியர்கள் மற்றும் துணை ஆசிரியர்கள் பலருக்கும் இந்த அச்சுறுத்தல் உள்ளது.

அடிமட்ட அளவில் இருந்து அரும்பாடு பட்ட பழைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்பு பணியில் இருந்தவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.

வேலைக்கு புதிதாய் வந்துள்ள அவர்களுக்கு வழங்கப்படும் அந்த அதிகப்படியான ஊதியத்தை, விஸ்வாசத்துடனும் உணர்வுப் பூர்வமாகவும் இருந்த பழைய பணியாளர்களுக்கு வழங்கியிருந்தால், அவர்கள் மகிழ்சியுடன் பணியாற்றுவார்கள் என்பதை, ஏன் அந்த நிர்வாகம் யோசிக்க மறந்தது, யோசிக்க மறுக்கிறது?

கண்ணனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கலைஞர் டிவி நிர்வாகம் எடுத்து வருகின்றது

அங்கிருக்கும் ஊழியர்கள், தற்போது நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கும் திரு.திருமாவேலனின் கைங்கரியமே இந்தக் கொடுமைக்கான காரணம் என புலம்புகின்றனர்.

திமுக தலைமையிடம் முறையிடு பவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும் அவலமும் அங்கே அரங்கேறுகிறது.

தற்போது அந்தப் பழைய பணியாளர் கள் நீக்கப்பட்டால் பள்ளி தேர்வு தருணத்தில் அவர்களது பிள்ளைகளின் நிலைமை என்னவாகும்?

அலுவலகத்தை இப்படி நிர்வகிக்கும் இவர்கள் நாட்டை எப்படி நிர்வகிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தேர்தல் நேரத்தில், திமுகவின் எதிர்கட்சிகளுக்கு இது தொக்காய் அமையாதா?

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கடந்த சனிக்கிழமை இந்து N.ராம் அவர்களுக்கு ஆதரவாக கண்டன கூட்டம் நடத்திய ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி, மாற்றத்திற்கான ஊடக வியலாளர்கள் மையம், மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் அமைப்புகளும் தீக்கதிர் குமரேசன் உள்ளிட்டோரும் 120 பேரின் குடும்பத்திற்காகவும் கலைஞர் டிவிக்கு எதிராகவும் நியாயத்தை கேட்பார்களா?

  • கா.அசதுல்லா
    தேசிய செயலாளர் , இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories