December 5, 2025, 6:08 PM
26.7 C
Chennai

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது; தொடருமா கைது வேட்டை?!

புது தில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் தில்லியில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க தனி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவரது கைதைத் தொடர்ந்து முறைகேடு விவகாரத்தில் சிக்கிய கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடையவர்கள் கைதாவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முந்தைய ஐ.மு. கூட்டணி ஆட்சியின்போது 2007இல் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதல் பெறப்பட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டார் கார்த்தி சிதம்பரம் என்று புகார் கூறப்பட்டது. அப்போது நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம். அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை சட்ட விரோத பணி பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் நேற்று தில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார்.

பாஸ்கர ராமனை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தாங்கள் பாஸ்கரராமனை விசாரணைக்கு அழைத்தபோது, விசாரணைக்கு பாஸ்கர ராமன் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றும் கூறி, அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து, 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தார் தனி நீதிமன்ற நீதிபதி சுனில் ரானா. இதன் பின்னர் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கார்த்தி சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பதும், அவர் நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை பெறுவதும் வாடிக்கை ஆகிவிட்டதாகக் கூறுகின்றார்கள் அதிகாரிகள்.

இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு உதவியவர்களை வளைத்து அதன் மூலம் வலுவாக ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories