மதுரையில் நிருபரின் கேமராவை புடிங்கி… ஆய்வாளர் செய்த அராஜகம்!

madurai inspector - 2026

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் வந்த போது அவரை பின் தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் வந்தனர்.

நியூஸ் 18 குழுவினரும் அவர்களது அலுவலக காரில் வந்தனர். சிந்தாமணி சந்திப்பில் முதல்வர் பேசிக்கொண்டிருந்த போது, அடுத்த இடமான வலையங்குளம் செல்ல நியூஸ் 18 குழுவினர் புறப்பட்டனர்.

பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வரும் போது, அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் மறித்தனர். மற்றவர்களுடன் நியூஸ் 18 குழுவின் வாகனமும் நின்றது .

போலீசாரின் பணி கருதி, அடுத்து நகராமல் அங்கேயே நின்றனர். வழியில் வரும் முதல்வர் பிரசார காட்சியை எடுக்க நியூஸ் 18 ஒளிப்பதிவாளர் ராம்குமார் கேமராவை எடுத்து சாலைக்கு வந்த போது, அவரை மறித்த கீரைத்துறை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன்(குற்றம்) ஒளிப்பதிவாளரை கேமரா உடன் தள்ளிக்கொண்டு அடித்து இழித்து சென்றார்.

1 - 2026கேமராவை ஆப் செய்யக்கோரி கடுமையான வார்த்தைகளால் சாடினார். நிதர்சனத்தை புரிய வைக்க உடன் வந்த தலைமை செய்தியாளர் ஸ்டாலின் முயற்சித்தும், அவரையும் சாடியதுடன், இருவரையும் காவலர் உதவியுடன் சிறைபிடித்தார். நகர முயன்ற ஒளிப்பதிவாளரை சட்டையுடன் பிடித்து இழுத்ததில் அவரது நேரலை பிஎன்சி கேபிள் அறுந்தது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அசாதாரண சூழல் குறித்து உடனடியாக செய்தியாளர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் தெரிவித்தார். அவர்களும் சம்மந்தப்பட்ட ஆய்வாளரை தொடர்பு கொண்டு கடிந்தனர்.

அவர்களை விடுவிக்க கூறினர். ஆனாலும் ஆய்வாளர், ‘ நான் கூறிய பின் எப்படி கேமராவை ஆப் செய்யாமல் இருந்தாய்…,’ எனக் கூறியதுடன், நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன். 4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை ஒன்று புடுங்க முடியவில்லை. இப்ப மட்டும் புடுங்க போறீங்களா?..,’ என தொடர்ந்து மிரட்டினார். இருவரையும் கைது செய்துள்ளதாகவும், ஜிப்பில் ஏறும்படி கூறினார். நாங்கள் மறுத்ததால் மீண்டும் சாடினார்.

இருவர் பெயரையும் குறித்து கொண்ட அவர், நீங்க போங்க பின்னாடியே எப்ஐஆர் போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன் என கூறினார். உயர் அதிகாரிகள் எங்களை புறப்பட கூறியதும், கார் கதவு அருகே வந்த டேவிட், சட்டையை பிடித்து இழுத்து மொபைல் போனை வாங்க முயன்றார்.

பின்னர் நாங்கள் நகர்ந்துவிட்டோம். நடந்த அனைத்தையும் நாங்கள் மட்டுமல்ல, கூடியிருந்த 100கணக்கான மக்களும் படம் பிடித்துள்ளனர். அதிகாரம் சாமனியர்களை மட்டுமல்ல ஊடகத்தையும் பதம் பார்க்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories