February 23, 2026, 3:18 AM
25.9 C
Chennai

வேலூரில் ஏற்கெனவே பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே… #மெய்யாலுமா?

ACShanmugam KadhirAnand - 2026

வேலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு ஆக.5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுடியின் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 14 லட்சம் வாக்காளர்களுக்கு அதிமுக தரப்பில் 80% பேருக்கு தலா 300 ரூபாயும் திமுக தரப்பில் 70% பேருக்கு தலா 200 ரூபாயும் பணப்பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப் படுகின்றன.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக., பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பதும், கல்லூரிகளுக்கு அதிபதி என்பதும் பணப்புழக்கம் தாராளமாக இருக்க காரணம். அதே போல், அதிமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகமும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருபவர் என்பதால், இருவர் பக்கமும் பணப் புழக்கம் அதிகம் என்கிறார்கள்.

ஏற்கெனவே பணம் புழங்கியதால்தான் தேர்தல் அதிகாரிகள் வேலூரில் முன்னர் தேர்தலை நிறுத்தினர். அந்த அளவில் ஒரே ஒரு தொகுதியாக வேலூர் தொகுதி, தேசிய அளவில் பெரும் பிரபலம் அடைந்துவிட்டது.

இந்நிலையில், பணம் படைத்த இருவரும் மீண்டும் போட்டியிடுவதால், பொறியியல் கல்லூரிகளுக்கு இருவரும் சொந்தக்காரர்கள் என்பதால், அந்த தொகுதியில் பணம் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கெனவே இருந்து வந்தது.

இந்த நிலையில், ஜூலை 30ஆம் தேதி மாலை மற்றும் 31ஆம் தேதி காலை என இரு வேளைகளில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வசிக்கும் 80% வாக்காளர்களுக்கு அதிமுக தரப்பில் ஒரு ஓட்டுக்கு தலா 300 ரூபாய் என 35 கோடி ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது!

அதுபோல் திமுக தரப்பில் 31ஆம் தேதி மாலை மற்றும் நேற்று காலை என இரு வேளைகளில் ஓட்டுக்கு 200 ரூபாய் வீதம் 70 சதவீத வாக்காளர்களுக்கு 20 கோடி ரூபாய் வரை பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

பணம் விளையாடும் வேலூரில் பணம் சென்றடைந்த சதவீதத்தை வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரிந்துவிட்டால், ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெறவைக்கிறார்கள் என்பதும் தெளிவாகிவிடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories