Home Blog Page 23

இலக்கியச்சாரல் புத்தாண்டு பொங்கல் இதழ் வெளியீடு

ilakkiya charal event - 2026

இலக்கியச் சாரல் அமைப்பானது கவிமாமணி இளையவன் அவர்களால் தொடங்கப்பட்டு இலக்கியச் சாரல் இதழ் 25 ஆண்டுகளாய் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. முதலில் செய்தி மடலாக வெளியிடப்பட்டு பின் வந்த வருடங்களில் இதழாக வந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான ‘சாரல்’ – ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 – 2001) நிறுவனர் கவிமாமணி இளையவன், சென்னை காந்தி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இலக்கியச் சாரலின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் என நான்கு தலைமுறையின் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். காவியக் கன்றின் உறுப்பினர்களும் நான்காம் வகுப்பு மாணவிகளான இமிழிசை காத்யாயினி, தன் இனிய குரலால் கடவுள் வாழ்த்து பாடினார் மற்றும் திவான்ஷி, வேலு நாச்சியாரைப் பற்றி உரையாற்றினார். யூ.கே.ஜி படிக்கும் க்ருத்விக், ஐந்து திருக்குறளை சொன்னார்.

இலக்கியச் சாரல் நிறுவனர் இளையவன், மூத்த உறுப்பினர்கள் சுந்தர மகாலிங்கம், நல்லப்பெருமாள், விஜயலெக்ஷ்மி நாராயணன் ஆகியோர் தங்கள் உரையினால் உறுப்பினர்களுக்கு வழிகாட்டினர்.

ரெ. முரளி, (ஆசிரியர், இலக்கியச் சாரல்), நாகராஜன், முன்னாள் தலைவர், எஸ். நாராயணன், டாக்டர் பிரதீபா மஹாலெக்ஷ்மி, தி. கோவிந்தராஜன், திருமதி சத்தியப்ரியா, ஜெயஸ்ரீ சாரி, ஆசிரியர், சாரல், கம்பதாசன் கோகுல் ராம், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி காசிநாதன், எஸ். சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

bluebird satelite launched by isro - 2026

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அமெரிக்க செயற்கைக்கோள் ‘ புளூபேர்ட்’ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54க்கு எல்.வி.எம் . , 3 ராக்கெட் வாயிலாக , புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்

இந்த ‘ புளூபேர்ட்’ செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம் தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது . இதன் எடை 6500 கிலோ. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை பாரதத்தின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ இன்று வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது . ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் பகுதியாக இது வெற்றிகரமாக ஏவப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். 

இது குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி, வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில் , உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது . வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் . நமது கடின உழைப்பாளி விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் . விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது . எல் . வி . எம் . , மூன்று ராக்கெட் வாயிலாக செயல்திறனை வெளிப்படுத்துவது வாயிலாக , ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம் . வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், 

இந்திய விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்… 

இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் விண்கலமான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ அதன் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 

இது இந்தியாவின் கனரக-தூக்கும் ஏவுதள திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய வணிக ஏவுதள சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை வலுப்படுத்துகிறது. இது ஒரு ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) பாரதத்தை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். நமது கடின உழைப்பாளி விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.  விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது! – என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதிகை, கொல்லம், மயிலாடுதுறை ரயில்கள் நேரம் மாற்றம்!

railway news - 2026
#image_title

கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் ரயில் நேரம் மாற்றம்

கொல்லத்தில் இருந்து தாம்பரம் செல்லும் கொல்லம் ரயில் வரும் 01/01/26 முதல் கால அட்டவணை மாற்றம் அமலுக்கு வர உள்ளது . அதாவது1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பாக தாம்பரம் செல்கிறது. இதுபோல் மயிலாடுதுறை செங்கோட்டை ரயில் நேரமும் மாறுகிறது.

வண்டி எண் 16102 கொல்லத்தில் இருந்து தாம்பரம் தினசரி விரைவு ரயில் உள்ளது
கொல்லம்:4:00pm
குந்தாரா:4:06pm
கொட்டாரக்கரை:4:15pm
அவனீஸ்வரம்:4:28pm
புனலூர்:4:55pm
தென்மலை:5:43pm
ஆரையன்காவு:6:13pm
செங்கோட்டை:7:10pm
தென்காசி:7:28pm
கடையநல்லூர்:7:43pm
சங்கரன்கோவில் :8:08pm ராஜபாளையம்:8:33pm
ஸ்ரீவில்லிபுத்தூர்:8:48pm
சிவகாசி:9:03pm
விருதுநகர்:9:43pm
மதுரை:10:25pm பதிலாக 01/01/26 முதல் 10:30pm
திண்டுக்கல்:11:25pm பதிலாக 01/01/26 முதல் 11:35pm
திருச்சிராப்பள்ளி:1:45Am பதிலாக 01/01/26 முதல் 12:50Am
விருத்தாசலம்:3:33Am பதிலாக 01/01/26 முதல் 2:24Am
உளுந்தூர்பேட்டை:3:49Am பதிலாக வரும் 01/01/26 முதல் 2:39Am
விழுப்புரம்:4:40Am பதிலாக வரும் 01/01/26 முதல் 3:08Am
செங்கல்பட்டு:6:28Am பதிலாக வரும் 01/01/26 முதல் 4:48Am
தாம்பரம்:7:30Am பதிலாக வரும் 01/01/26 முதல் 6:05Am அதாவது1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பாக தாம்பரம் செல்கிறது

குறிப்பு ( இந்த ரயில் 19/06/25 முதல் 03/2/26 வரை சென்னை எழும்பூர்க்கு வராது அதற்கு மாற்றாக தாம்பரத்தில் தான் வந்து சேரும் தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர்க்கு ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

இதுபோல் மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை விரைவு ரயில் 01/01/26 முதல் நேர மாற்றம் அமலுக்கு வருகிறது

வரும் 01/01/26 முதல் வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது

மயிலாடுதுறை :12:10pm பதிலாக 12:35pm புறப்படும்
குத்தாலம் :12:47pm ஆடுதுறை : 12:57pm
கும்பகோணம் :1:06pm
பாபநாசம் : 1:17pm
தஞ்சாவூர் :1:39pm
பூதலூர் : 1:57pm
திருவெறும்புர் :2:13pm
மஞ்சதிடல் :2:19pm
திருச்சிராப்பள்ளி :2:40pm
மணப்பாறை :3:00pm
வையம்பட்டி :3:24pm
வடமதுரை : 3:39pm
திண்டுக்கல் : 3:57pm
கொடைக்கானல் ரோடு :4:16pm
மதுரை :5:10pm
திருப்பரங்குன்றம்: 5:26pm
திருமங்கலம் :5:35pm
கள்ளிக்குடி :5:44pm
விருதுநகர் : 6:03pm
திருத்தங்கல்: 6:22pm
சிவகாசி :6:29pm
ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm
இராசபாளையம்:6:59pm
சங்கரன்கோவில் :7:29pm
பாம்புக்கோவில்சந்தை:7:41pm
கடையநல்லூர்:7:52pm
தென்காசி :8:09pm
செங்கோட்டை :8:55pm க்கு சென்றடையும் .

இதுபோல் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் நெல்லை செங்கோட்டை ரயில் உட்பட பல்வேறு ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு உள்ளது .

பொதிகை இனி மாலை 6.45க்கு பதில் 6.50க்கு புறப்பட்டு 20நிமிடம் முன்னதாக சென்னை எழும்பூர் செல்லும் .

Empty Rāgas, Full Canteens: The Great Sabha Vanishing Act of 2025–26

margazhi mahotsav - 2026

          Narasimhan Vijayaraghavan

The thinning of audiences in the 2025–26 season is not a quirk of calendar but a structural malaise. Free afternoon concerts were once crowded proving grounds for artistes on the cusp, with halls that quietly drained at dusk as ticketed celebrity evenings began—a ritual that signified abundance.

This year, the chairs stay vacant regardless of hour. The paradox deepens when one recalls that the supply of trained musicians has never been richer: millennials and Gen Z artistes, global pedagogy, and technical polish aplenty. Yet demand appears anaemic.

One explanation is saturation. Too many Sabhas, too many concerts, compressed into too few weeks, competing for the same finite pool of listeners. Scarcity once created pilgrimage; excess now breeds indifference.

Another shift is behavioural. Rasikas have not vanished; they have dispersed. Social media is awash with images of packed venues elsewhere, suggesting attendance has become selective and episodic—driven by buzz rather than habit.

Most curious is the failure of live streaming. Offers found no takers, despite an obvious constituency: homebound listeners and the elderly, long assumed to crave access without travel. Streaming fell between stools—neither the gravitas of the hall nor the intimacy of private listening—an idea right in theory, wrong in execution.

One can almost hear Subbudu sharpening his pen. He might have remarked that when music multiplies faster than listening, halls will echo, artistes will perspire, and only the sambar will enjoy standing ovations.

The canteens thrive because food adapts faster than institutions. Until concerts do the same—spread across the year, reimagined in form, and freed from seasonal congestion—the music will endure, but the halls may not.

ஆரன்முழாவில் இருந்து சபரிமலை ஐயப்பன் தங்க அங்கி புறப்பாடு!

sabarimala aiyappan temple gold angi procession - 2026

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில் சுவாமி ஐயப்பனுக்கு அன்று அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று டிசம்பர் 23 ஆம் தேதி ஆரண்முழா பார்த்த சாரதி கோயிலில் இருந்து சபரிமலை போல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ‌தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

27 ஆம் தேதி மண்டல பூஜைக்காக 26 ஆம் தேதி சபரிமலையை அடையும். அன்று மாலை தீபாராதனையின் போது சுவாமிக்கு தங்கி அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறும் 27ஆம் தேதி மண்டல பூஜை இன் போதும் சுவாமிக்கு இந்த தங்கி அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்

மண்டல பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் டிசம்பர் 23 ஆம் தேதி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 26 ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன் சபரிமலை சன்னிதானத்தை அடையும். டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முலா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.திரளானழர்கள் தரிசனம் செய்தனர்.மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அர்ப்பணிப்பதற்காக தங்க அங்கியை 421 பவுன் எடையில் திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கினார்.

sabarimala aiyappan temple gold angi procession2 - 2026

தங்க அங்கி
டிசம்பர் 23: ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் தொடங்குகியது

பல்வேறு ஊர்களில் ரத ஊர்வலம் சென்று வரும் டிச 26 மதியம் 1.30 மணிக்கு பம்பா வந்தடையும் .பிற்பகல் 3 மணிக்கு பம்பாவிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு சரம்குத்தியை அடையும் .இங்கிருந்து, சடங்குகளுடன் வரவேற்கப்பட்டு, சன்னிதானத்திற்கு தங்க அங்கி அழைத்துச் செல்லப்படும் 18வது படியில் ஏறி சோபனத்தை அடையும் போது, ​​தந்திரியும் மேல்சாந்தியும் வரவேற்று ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி வைப்பார்கள். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

27 ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு மண்டல பூஜையில் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல அபிஷேக நிறைவு பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்காங்கி ஆரம்பம் பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

bhagavat githa series - 2026

பகவத் கீதைபகுதி 4 : கைவர்தக: கேசவ:

முனவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

எனது தந்தையார் கே.எஸ். வைத்தீஸ்வரன் சொல்லுகின்ற இரண்டாவது பகவத்கீதை ஸ்லோகம், பகவத்கீதையின் த்யான ஸ்லோகங்களில் ஒன்று. அந்த ஸ்லோகம் பின்வருமாறு –

பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தார நீலோத்பலா
சல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ கர்ணேந வேலாகுலா
அஸ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதநாவர்திநீ
ஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேசவ:

பூபாரம் தீர்க்க வந்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதன் விளைவு மகாபாரதப்போர். இந்த ஸ்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கின்றனர். இவர்களைத் தாண்டி அந்த நதியினுள் யாரும் புக முடியாது. வெளியே வரவும் முடியாது. ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரி துச்சலையின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம். அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

சகுனி நீலோத்பலம் என அழைக்கப்படும் நீலத்தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். சல்லியன் முதலை. நீரில் முதலை எவ்வளவு வலிமையானது என நாம் அனைவரும் அறிவோம்.

கிருபர் நதியின் வேகம். ஆங்கிலத்தில் இதனை viscous flow என்பார்கள். நதியில் மூழ்கி, மீண்டும் எழும்போது சிறிது தூரம் தள்ளி நாம் எழுவோம். ஹரித்வார் படித்துறையில் கங்கை நதி வேகமாக ஓடுவதால் நாம் பிடித்துக்கொண்டு மூழ்குவதற்காக சங்கிலிகள் கரையருகில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனைப் போலவே கிருபரும் தன்னுடன் பொரில் ஈடுபடுபவர்களை இழுத்துக்கொண்டு சென்று அழித்து விடுவார் என்பதற்காக இந்த உருவகம். கர்ணன் அந்த நதியின் அலை. அலையடிக்கும்போது மக்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பார்கள்.

அதுபோல கர்ணன் போரிடும்போது பலர் உயிரிழப்பர் என்பதை இந்த உருவகம் சுட்டிக்காட்டுகிறது. அஸ்வத்தாமன் விகர்ணன் போன்றவர்கள் சுறாமீன்கள் போன்றவர்கள். 

துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான்.

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

bhagavat githa series - 2026

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?

பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம் சென்று, “ஐயா, வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம்?” என்று கேட்பார்கள். அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக துறவி இந்த ஸ்லோகத்தை கூறுவார்.

வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான மங்களகரமான தருணம் ஒவ்வொரு தனிநபரின் கைகளிலும் உள்ளது. நீங்கள் நித்திய ஒழுக்கத்தில் நம்பிக்கையைப் பெறும்போது, ஆன்மீக ஒழுக்கத்தின் கட்டளைகளை நீங்கள் செயல்படுத்தும்போது, மனம் சமநிலைக்கு கொண்டு வரப்படும்போது, அது ஆத்மாவில் நிலையாக நிலைநிறுத்தப்படும்போது, அந்த நொடியே மனிதன் விடுதலை பெற்று ஜீவன்முக்தனாக மாறுகிறான்.

ஜீவன் முக்தி என்பது ஒரு ஆன்மீக நிலை. ஒரு மனிதன் இந்த நிலையை அடையும்போது, அவன் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறான். ஆதிசங்கரர் தாம் இயற்றிய பஜகோவிந்தத்தில் 

சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

என்று கூறுகிறார். இந்த வரிகள், நல்லோர் சகவாசத்தால் பற்றின்மை உண்டாகும், அதன் பிறகு மனத்தெளிவு கிடைக்கும், அதன் பிறகு நிலையான உண்மை புலப்படும், அதுவே ஜீவன் முக்திக்கு இட்டுச் செல்லும் என்பதைக் குறிக்கிறது.  

இப்போது, விடுதலைக்கு அல்லது ஜீவன் முக்திக்கு  வழிவகுக்கும் அந்த நடைமுறை என்ன? ஆசைகளை கைவிட வேண்டும். ஜஹதி என்பதற்குப் பதிலாக பிரஜஹதி என்ற வலுவான சொல்லை இறைவன் பயன்படுத்துகிறார். இதன் மூலம் ஆசைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.

சில ஆசைகளை மட்டுமல்ல, அனைத்து ஆசைகளையும், மனதின் உள் இடைவெளிகளில் சிறிதும் எச்சத்தை விட்டுவிடாமல். இது தவிர்க்க முடியாத மற்றும் உலகளாவிய சட்டம். வேறு வழியில்லை. மனதின் குழியில் ஆசையின் மிகச்சிறிய விதை விடப்பட்டாலும், அது முளைத்து, அறியாமலேயே வளரும், மேலும் தேடுபவர் சுய நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் மாயையின் சேற்றில் மூழ்கும் ஆபத்து எப்போதும் உள்ளது. 

அதைத்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எல்லா ஆசைகளையும் ஓரளவுக்குக் கைவிடுவது அல்லது சில ஆசைகளை மட்டும் முற்றிலுமாக கைவிடுவது போதாது. எல்லா ஆசைகளையும் என்றென்றும் முற்றிலுமாகத் துறக்க வேண்டும். 

ஆசைகளைத் துறக்க முறைப்படி வாழவேண்டும். அதாவது அட்டாங்கயோக முறையான இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றைக் கடைபிடித்து வாழவேண்டும்.

அட்டாங்கயோக முறை

இயமம்

இவற்றில், இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், உண்மையைக் (சத்தியம்) கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதற்படி நிலையாகும்.

சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாதாரண அறங்களில் முதலாவது அன்பு அதாவது பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருத்தல். அடுத்தது உண்மையையே பேசுதல் அல்லது சத்தியம் பேசுதல்.  சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பது. மனதில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே பொய்மை எனப்படும் அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள். மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே இறைவன் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். 

சத்தியத்தின் விளக்கம்

முழுமையான, பிறருக்குத் துன்பம் தராத வாழ்க்கைக்கு, அதாவது அகிம்சைக்கு நமது நீதி இலக்கியங்களில் சில விலக்குகள் இருக்கின்றன. அறத்தினைக் காப்பதற்காக போர் புரியும் போதும், வேறு சில சமயங்களின் போதும் அகிம்சைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது. ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவர் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘அவன் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவர் அப்படிச் சொல்வதால் இவருக்கோ மக்களுக்கோ பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வீணாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சத்தியமாகிவிடுமா? ஆகாது. ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு வரையறையை பெரியோர் வகுத்திருக்கின்றனர்.

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு பலனில்லாமல் போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு. ஆசையும் கோபமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. நன்மையை உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக ஆசை கோபமற்ற நல்ல மனம் வேண்டும்.

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் விளைவு உண்டு – அதாவது அந்த சத்தியசந்தனுக்குத் தெரியாமலேயே ஒரு விளைவு உண்டாகும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே நிஜ வாழ்க்கையில் சத்தியமாக நடந்துவிடும். அபிராமி பட்டரின் கதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

நியமம் 

நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைவது ஆகும். இது கிரியை எனப்படும். தினசரி குளித்தல், சுத்தமான ஆடை அணிதல், நம் சுற்றுப்புரத்தைத் தூய்மையாக வைத்தல், நல்ல உணவுப் பழக்கத்தைக் கொண்டிருத்தல் ஆகியவை இதனுள் அடங்கும்.

ஆசனம் 

இது உடற்பயிற்சி நிலைகளைக் குறிக்கும். அதாவது யோகாசன முறைகளைக் குறிப்பிடும். பிராணயாமம் என்பது மூச்சினைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளாகும். மூச்சை கட்டுப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்தல் என்றும் இதனைக் கொள்ளலாம். பிரத்தியாகாரம், புலனடக்கத்தைக் குறிக்கின்றது. உள்ளத்தை கண்டபடி அலையவிடாமல் தடுத்து காத்தல் பிரத்தியாகாரமாகும். தாரணை மன ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. தியானம் என்பது இறைவனை உணரும் நிலையாகும்.  ஒன்றையே நினைத்து எண்ண உருவாக்கத்தை கட்டுப்படுத்தல் என இதனைக் கூறலாம். இறைவனுக்குச் சமனான பேரின்ப நிலையை அடவைவதை சமாதி எனக் குறிப்பிடுகிறோம். 

இயமம் என்பதற்கு கட்டுப்பாடு என்று பொருள் கொள்ளலாம். யோக நெறியில் ஈடுபடுபவன் சுய கட்டுப்பாடுகளாகச் சில விதிகளை கடைபிடித்தல் வேண்டும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இது தன்னாளுமைப் (Personality) பண்புகளில் ஒன்றாகும். உளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்தூய்மையைப் பெற முடிகின்றது. அகத்தூய்மை பெற்றவர்களால்தான் புறத்தூய்மையை எளிதில் பெற இயலும்.

நான் தினந்தோறும் குளித்து, தூய ஆடை உடுத்தி, இறைவனை வழிபட வேண்டும் என்பதற்காக எனது தந்தையார், எனக்குத் தந்த அறிவுரை இது.

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

sabarimala at night - 2026

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும். அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு இந்த ஆண்டு மண்டல பூஜையின் முகூர்த்தம் 27 ஆம் தேதி காலை 10.10 முதல் 11.30 மணிக்குள் இருக்கும் என்று கூறினார்.

பூஜையுடன் தொடர்புடைய தீபாராதனை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்ப சுவாமி மீது வைக்கப்படும் தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும்.

தீபாராதனைக்கு முன்னதாக மாலையில் சபரிமலை சன்னிதானத்தை அடையும். ஐயப்பன் சிலை மீது தங்க அங்கி வைக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 27 ஆம் தேதி மதியம் தங்க அங்கி வைக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். பின்னர், 27 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் மூடப்படும். மகரவிளக்கு விழாவிற்காக 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று தந்திரி தெரிவித்தார்.

மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அர்ப்பணிக்கப்பட்டது. டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முளா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாசம் ஏதும் வழங்கப்படவில்லை தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் இந்த வழி பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் சொல்ல முடியும்.

அதற்குப் பிறகு பெருவழி பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை இது போல் சத்தரம் பாதை வழியாக தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது வழக்கம் போல் செயல்படுகிறது என தெரிவித்தார்

சபரிமலையில் தற்போது பெரும் கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் திருவாங்கூர் தேவசம்போர்டு செய்து கொடுத்துள்ளது

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

narada gana sabha - 2026

            Narasimhan Vijayaraghavan

On the twenty-first evening of December 2025, the venerable halls of Narada Gana Sabha were not merely filled with sound; they were suffused with meaning. At a time when murmurs of thinning audiences have accompanied the Margazhi season like an unwanted sruti, the Trichur Brothers presided over a gathering where empty seats were conspicuous by their absence. Sir Neville Cardus would have smiled—his irreverent insistence on “rears to be seated” was amply satisfied. What unfolded was not just a concert, but a collective immersion.

The evening opened with Saint Tyagaraja’s “Teliyaleru Rama” in Dhenuka, a gentle admonition that ritual without inward devotion is but an empty shell. That philosophical overture yielded seamlessly to the assured gait of “Paripalaya Mam” in Reethi Gowla, rendered with muscular clarity and unflagging momentum. The brothers’ music carried the stamp of lineage—robust, unsentimental, and nourishing—leaving the audience willingly tethered to its rhythmic pulse.

A tender Hemavathi alapana followed, honeyed yet uncloying, setting the stage for Muthuswamy Dikshitar’s “Kanthimathim.” In this, Dikshitar’s 250th birth year—curiously coinciding with the 250th year of American independence—the Guruguha mudra emerged with sculpted precision. The ensuing swara exchanges sparkled with abundance, a cascade of melodic confections tossed back and forth like a lavish platter of halvas, provoking spontaneous applause that rippled through the hall.

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder to last season’s controversies. Yet the evening’s true summit arrived with the Ragam Tanam Pallavi, anchored in the uncompromising line:

“Pengalai Kaapathu Kadamaiada:
Nam Bharatha Naatin Dharmamada.”

As these words unfurled, the hall seemed to contract into stillness. Ahead of me sat a young girl—a special child—her world often governed by silences others scarcely notice. As the pallavi gathered force, tears traced their way down her face, unbidden and pure. Her parents watched, equally undone. In that instant, the music ceased to be art and became invocation. A 150-minute vigil found its meaning in a child’s wordless response. Technique bowed to truth. The divine, briefly, felt within reach.

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

sabarimala satya meals - 2026

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதிய புதிய அன்னதானத்தை வாழையிலையில் பரிமாறினால் நன்றாக இருக்கும் என பக்தர்கள் பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் மதிய அன்னதானத்தின் ஒரு பகுதியாக, சபரிமலை யாத்ரீகர்களுக்கு கேரள சத்யா பரிமாறப்படுகிறது. இந்த சாதத்தில் பருப்பு நெய் சாம்பார், ரசம், அவியல், ஊறுகாய், தோரன், பப்படம் மற்றும் பாயசம் போன்ற உணவுகள் பரிமாறப்படுகின்றன. அவியல் மற்றும் தோரன் ஒவ்வொரு நாளும் மாறும். மோர், ரசம் அல்லது புளிசேரி என ஒரு உணவு பதார்த்தம் பரிமாறப்படும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான பாயசம் பரிமாறப்படும்.

வரும் நாட்களில், கேரள சத்யா மாற்று நாட்களில் வழங்கப்படும். மதியம் 12 மணிக்கு, தேவஸ்வம் நிர்வாக அதிகாரி ஓ.ஜி. பிஜு தீபம் ஏற்றி, ஐயப்பனுக்கு சத்யா வழங்கினார். பின்னர், அன்னதானத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு சத்யா பரிமாறப்பட்டது. சத்யாவுக்கு எஃகு தட்டுகள் மற்றும் எஃகு கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில்நுட்ப வசதிகளை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் சத்யா தாமதமானது என்றும், அன்னதானத்தின் இறைவனான அய்யப்பனின் ஆசியுடன், அடுத்தடுத்த நாட்களிலும் சத்யா பரிமாற முடியும் என்று நம்புவதாகவும் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளாவிற்கு வரும் பக்தர்களுக்கு மலையாள சத்யாவின் சுவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பக்தர்களுக்கு சத்யா பரிமாற முடிவு எடுக்கப்பட்டது. பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நண்பகலில் ஐயாயிரம் பேர் அன்னதானத்தில் பங்கேற்கின்றனர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சத்யாவும் தயாரிக்கப்படுகிறது. மாற்று நாட்களில் பக்தர்களுக்கு சத்யாவும் புலாவும் மாறி மாறி வழங்கப்படும். சன்னிதானம் சிறப்பு அதிகாரி பி. பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்