Home Blog Page 23

Reasons why Governor declined reading the Govt speech in the Assembly!

0
TN Governor RN Ravi
TN Governor RN Ravi

In a tense atmosphere, the first session of the year in the Tamil Nadu Legislative Assembly began this morning at 9:30 AM with the Tamil anthem. The national anthem was supposed to be sung afterward. However, as the national anthem was not played after the assembly convened, Governor Ravi left without reading the Tamil Nadu government’s address.

Following this, the Governor’s office issued a clarification regarding the events that transpired in the assembly.

Reasons why Governor declined reading the Govt speech in the Assembly:

1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak;

2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people are ignored;

3- Claim that the state attracted huge investments to the tune of over 12 lakh crores is far from the truth. Many of the MOUs with prospective investors remain only on paper. Actual investment is hardly a fraction of it. Investment data show that Tamil Nadu is becoming less attractive for investors. Until four years ago Tamil Nadu, among the states, was the fourth largest recipient of foreign direct investment. Today it is struggling to remain at the Sixth.

4- Women safety issue is totally ignored though there is alarming increase of over 55% incidents of POCSO Rapes and over 33% increase in incidents of sexual molestation of women;

5- Rampant prevalence of Narcotics and Drugs and sharp increase in Drug abuse cases among youth including school students is a very serious concern. Over 2000 (two thousand) mostly youth committed suicide in one year due to drug abuse. It is seriously jeopardising our future.

It is casually bypassed;

6- Atrocities against Dalits and sexual violence against Dalit women is sharply increasing. However; it is totally bypassed;

7-About 20,000 (Twenty thousand) people in our state committed suicide in one year- almost 65 suicides everyday. Nowhere else in the country the situation is so alarming. Tamil Nadu is being referred as the Suicide Capital of India. Yet it does not seem to concern the government. It is bypassed;

8- There is steady decline in standards of education and widespread mismanagement in educational institutions adversely affecting the future of our youth. More than 50 % faculty positions are vacant for years and guest faculties are restive all over. Our youth are staring at uncertain future.

It does not seem to bother the government and the issue is totally bypassed;

9- Several thousand Village Panchayats are defunct because elections have not been held for years. They are directly under special officers of the government. Crores of people are denied of their rights of grassroots democracy. This is against the letter and spirit of the Constitution. People are anxiously waiting for restoration of Village Panchayats. However, this does not find even a mention in the speech.

10- Several thousand temples in the state are without Board of Trustees and are directly administered by the state government. Millions and millions of devotees are deeply hurt and frustrated with the mismanagement of temples. Crucial directions of the Hon’ble Madras High Court on the restoration and preservation of ancient temples are not implemented even after 5 years. Sentiments of devotees callously ignored;

11- MSME sectors are under huge stress due to visible and invisible costs of running the industry. They are the crucial sector for employment and growth. However, as against over 55 million registered MSMEs in the country Tamil Nadu has only about 4 million despite enormous potential for growth. Entrepreneurs from Tamil Nadu are forced to locate their enterprises in other states. The issue is completely ignored;

12- There is widespread discontentment among lower rung employees in almost all sectors. They are restive and frustrated. No mention of ways to address their genuine grievances;

13- National Anthem is yet again insulted and the Fundamental Constitutional Duty disregarded. 

தேசிய கீதம் புறக்கணிப்பு; சட்டமன்றத்தில் உரையைப் புறக்கணித்து வெளியேறிய ஆளுநர்!

TN Governor RN Ravi
TN Governor RN Ravi

பரபரப்பான சூழலில், ஆண்டின் முதல் கூட்டத்தொடர், தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.  சட்டசபை கூடியதும்,  தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ரவி, தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம், ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையில், அரசின் கொள்கைகள், அரசு செயல்படுத்திய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் முதலியவை இடம் பெறும். ஆளுநர் பேச வேண்டிய உரையை, தமிழக அரசு தயாரித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அதை, சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிப்பார். அதன் தமிழாக்கத்தை அவைத்தலைவர் வாசித்து முடித்ததுடன் அன்றைய அவை நடவடிக்கைகள் நிறைவு பெறும். மறுநாள் தொடங்கி ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, ஆளுநர் உரைக்கு ஒப்புதல் வழங்கப்படும். இது தான் வழக்கமாக நடைபெற்று வருவது. 

1083247 ravi33 - 2026

ஆனால் திமுக., அரசு அமைந்த பிறகு ஆளுநருடன் மோதல் போக்கையே மேற்கொண்டு வருகிறது. சட்டப்பிரிவு 356ன் மீதான அச்சம் இல்லாததால், கூட்டணி போட்டு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால்,  ஐந்து ஆண்டுகளுக்கு எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் மாநில அரசு அனைத்து வகையிலும் மத்திய அரசுடன் அரசியலுக்காக மோதல் போக்கையே மேற்கொண்டு வருகிறது. அதன் பலன், மக்கள் நலன் பெரிதும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி பெரிதும் சரிந்து போயுள்ளது என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது. 

திமுக., அரசு அமைந்த தொடக்கத்தில்  முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட அதிரடி ஆய்வுகளுக்கு முடிவுரை எழுத அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தங்கள் ஊடகங்களின் மூலம் பரப்பி அவதூறு கிளப்பியது திமுக., பின்னர் தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்ட பின்னர் வழக்கம் போல் அரசியலை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கே பல விதங்களில் நிலவி வருகிறது. 

இந்நிலையில் ஜன.20 இன்று காலை தமிழக சட்டமன்றத்தின் ஆண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. இதற்காக சட்டமன்ற வளாகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, அவைத்தலைவர் அப்பாவு வரவேற்றார். ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் காலை 9.30க்கு சட்டமன்றக் கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அவை கூடியதும் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை. இதனால் ஆளுநர் ரவி உரையை படிக்காமல் புறப்பட்டுச் சென்றார். 

கடந்த ஆண்டும் இதே போல், உரை நிகழ்த்த சட்டமன்றத்துக்கு ஆளுநர் வந்தார். ஆளுநர் உரை நிகழ்த்தும் முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை மரபாக ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபு என்று அவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார். எனினும், தேசிய கீதம் இசைக்கப்படாததைக் கண்டித்து, அவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். இதன் பின்னர் ஆளுநர் உரையை அவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதே போல் இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது. 

1083255 ravione33 - 2026

முன்னதாக, 2024ல், தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில், ‘சமூக நீதி, சுய மரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, அமைதிப் பூங்கா’ உள்ளிட்ட அலங்கார வார்த்தைகளைத் தனது உரையில் ஆளுநர் தவிர்த்தார். இது அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசு தயாரித்து அளிக்கும் உரையை அப்படியே வாசிப்பதுதான் ஆளுநர் வேலை என்ற விதமாக திமுக.,வினர் கூறினர். எனினும், அரசு தயாரித்து அளித்த உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தார். இதனால் அவை நிகழ்வு முடியும் முன்பே அவையிலிருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.

ponmudi - 2026
#image_title

அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி ஆளுநரைப் பார்த்து மிக மோசமான உடல் மொழியில் போய்யா என்று சைகை காட்டியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 

நாகர்கோயில், நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் முனையம் மாற்றம்!

railway news - 2026
#image_title

நாகர்கோவில், மற்றும் திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் முனையம் மாற்றியமைக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து கொங்கன் வழித்தடத்தின் வழியாக மும்பை தாதர் செல்லக்கூடிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இனி லோக்மான்ய திலக் முனையத்திற்கு செல்லும் தாதர் ரயில் முனையம் செல்லாது.

நாகர்கோவிலில் இருந்து சேலம் வழியாக மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் சென்ற ரயில் இனி மும்பை லோக்மான்ய திலக் முனையதிற்கு செல்லும்

நாகர்கோவிலில் இருந்து திருச்சி விழுப்புரம் காஞ்சிபுரம் வழியாக மும்பை சத்திரபதி சிவாஜி டெர்மினஸ் சென்ற ரயில் இனி மும்பை லோக்மான்ய திலக் முனையத்திற்கு செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது

திருவனந்தபுரத்திலிருந்து கோயம்புத்தூர் சேலம் பெங்களூர் வழியாக மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் செல்லும் வாராந்திர ரயில் இனி லோக்மான்ய திலக் முனையத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தென் மாவட்டங்களில் இருந்து மும்பை செல்லக்கூடிய ரயில்களின் முனையம் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது .இதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. நடைமுறைப்படுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய ரயில்வே செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது .

பொங்கல், தீபாவளின்னா… தென் மாவட்டங்களுக்கு ஸ்பெஷல் ட்ரெய்ன் விடுங்கப்பா! தாங்க முடில..!

crowd in trains and buses - 2026

தீபாவளி லீவைத்தொடர்ந்து பொங்கல் லீவுக்கும்.. இதே நிலைதான்! சென்னைக்கு வர.. ரயில் நிலையங்களில் முண்டியடித்த கூட்டம்!

ஒவ்வொரு பண்டிகை விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சிரமப்படுவதும், அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்ப கஷ்டப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்த முறையும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர, மக்கள் ரயில் நிலையங்களில் முண்டியடித்து உள்ளனர்.

குறிப்பாக செங்கோட்டை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளும் ஏறியுள்ளதால், பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுவாக இதுபோன்ற பண்டிகை நாட்களில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், தாம்பரத்திலிருந்தும், எழும்பூரிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை ஜன.15ம் தேதி தொடங்கியது. ஆனால், ஜன.14ம் தேதியான போகி பண்டிகைக்கே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் ஜன.13ம் தேதி இரவும், ஜன.14ம் தேதி இரவும் புறப்பட்டு சென்றனர்.

இன்னும் சிலர் ஜன.9, 10 மற்றும் 11ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டனர். இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இப்படி இருக்கையில், இன்றுடன் விடுமுறை முடிவடைவதால் மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி உள்ளது.

செங்கோட்டை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டால்தான், அடுத்த நாள் காலை 4-6 மணிக்கு சென்னைக்கு வர முடியும். எனவே பயணிகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றன. சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாததால், பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ஏரியதால், முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட பொதிகை அதிவிரைவு ரயில் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக தாம்பரம் வரை சென்ற கொல்லமையில் சிலம்பு அதிவிரைவு ரயில் திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் புறப்பட்ட நெல்லை அதிவிரைவு ரயில் கன்னியாகுமரி சென்னை அதிவிரைவு ரயில் கொல்லம் திருவனந்தபுரம் நாகர்கோவில் சென்னை அதிவிரைவு ரயில் உட்பட அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்த பெட்டிகள் சாதாரண இயற்கைப் பெட்டிகள் உட்பட அனைத்து பெட்டிகளுமே எண்ணிக்கைக்கு அதிகமாக மூன்று மடங்கு பயணிகள் பயணித்தனர் ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டை ரயில் நிலையத்தில் பகல் 2 மணி முதல் பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது

இனிவரும் காலங்களில் பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக மேலும் கூடுதல் பயண வசதிகளை ரயில்வே துறையும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தித் தருவது அவசியம் ஆகும்

அம்ரித் பாரத் ரயில்கள்; தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம்!

railway news - 2026
#image_title

அம்ரித் பாரத் ரயில்கள் திருவனந்தபுரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் பகுதி வழியே ரயில்கள் செல்லும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக., கைப்பற்றி சாதனை படைதத்து. எனவே பாஜக., தலைவர்கள் தங்கள் பகுதியான திருவனந்தபுரத்துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில் போக்குவத்தில் பெரிதும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோல், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், பாஜக., இம்முறை அங்கு வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது. இந்த முறை அங்கு பாஜக., அலை வீசுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக இருந்தாலும், மத்திய பாஜக., அரசு மேற்கு வங்கத்தில் மக்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செய்லபடுத்தியும் வருகிறது.

அசாமில் பாஜக., ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்கத்தின் மால்டா நகருக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ரயில் சேவைகளையும், நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்கத்தின் ஹவ்ரா முதல் அசாம் கௌஹாத்தி வரை இயக்கப்பட உள்ள நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மால்டா ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிவைத்தார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க வழி செய்யும். வழக்கமான பயண நேரத்தை விட இது இரண்டரை மணிநேரம் முன்கூட்டியே சென்றுவிடும்.

3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

தமிழ்நாட்டுக்கும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தையும் மேற்கு வங்கம், அசாம் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் நான்கு அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த நான்கு ரயில் சேவைகளில் மூன்று ரயில்கள் மேற்கு வங்கம் – தமிழ்நாடு இடையே இயக்கப்படுகின்றன.

மேற்கு வங்கத்தின் சாண்ட்ரகாச்சி -சென்னை தாம்பரம் (ரயில் எண்: 16107/16108) இடையேயான ரயில், தமிழ்நாட்டின் நாகர்கோவில் – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையேயான (ரயில் எண்: 20603/20604) ரயில், தமிழ்நாட்டின் திருச்சி – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையேயான (ரயில் எண்: 20609/20610) ரயில் என மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி SMVT பெங்களூரு – மேற்கு வங்கத்தின் அலிபூர் துரார் இடையேவும் ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கவனிக்க வேண்டியதே, அதில் அனைத்து பெட்டிகளும் சாதாரண பெட்டிகளாகும். அதாவது குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையவே கிடையாது. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும். பொதுபெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இதில் உள்ளன. இதில் 1000 கி.மீ., தூரத்திற்கு 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்னும் குறைவான தூரத்திற்கு, குறைவான கட்டணமே வசூலிக்கப்படும்.

நாகர்கோயிலுக்கு வந்த அம்ரித் பாரத் ரயில் பெட்டிகள்!

நாகர்கோவிலில் இருந்து 2 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் துவங்கி வைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையிலிருந்து இன்று அனுப்பப்பி வைக்க ப்படுவதாக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமித்பாரத் ரேக் 17 நாகர்கோவில் நோக்கி அனுப்பப்படுகிறது // வரும் ஜனவரி 22/23 தேதிகளில் இந்த புதிய வழித்தடத்தில் அம்ரித் பாரத் ரயில் துவங்கி வைக்கப்பட உள்ளது

திருவனந்தபுரம் ஹைதராபாத் ,
திருவனந்தபுரம் தாம்பரம்,
நாகர்கோவில் ஹைதராபாத்,
நாகர்கோவில் மங்களூர்,
கோயம்புத்தூர் தன்பாத்

உள்ளிட்ட ஐந்து வழித்தடங்களில் புதிய அமிர்த பாரதி ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் தாம்பரம் – திருவனந்தபுரம் அல்லது, திருவனந்தபுரம் – ஹைதராபாத் ரயில் கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் இருந்தது. ஆனால், ஒற்றை ரயில்பாதை, மலைப் பாதை, வருவாய் பிரச்னை என பல காரணங்களைச் சொல்லி, வழக்கம்போல் நாகர்கோயில் திருநெல்வேலி பாதையிலேயே இந்த ரயில்கள் திட்டமிடப்பட்டதால், தென்காசி, ராஜபாளையம் பகுதி மக்கள் பெரும் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு!

sabarimala at night - 2026

சபரிமலையில் 18ஆம் தேதி வரை மட்டும் நெய்அபிஷேகம் நடைபெறும் 19.1.26 தங்கககுடத்தில் களபாபிஷேகம் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 19-ம் தேதி வரையே பக் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஜன18வரை நேய் அபிஷேகம் நடைபெறுவதால் இருமுடி கட்டி நெய் கொண்டு செல்லும் பக்தர்கள் அனைவரும் காலைக்குள் சபரிமலையில் இருந்தால் நெய் அபிஷேகம் செய்து வரலாம்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகரஜோதி தரிசனத்​துக்​காக கடந்த 30-ம் தேதி கோயில் நடை திறக்​கப்​பட்​டது. தின​மும் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 14-ம் தேதி ஐயப்​பனுக்கு பாரம்​பரிய நகைகள் அணிவிக்​கப்​பட்டு சிறப்பு தீபா​ராதனை நடை​பெற்​றது.

தொடர்ந்​து, அன்று மாலை பொன்​னம்​பலம் மேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். கோயி​லில் நாளை​யுடன் நெய்​யபிஷேகம் நிறைவு பெறுகிறது. வரும் 19-ம் தேதி இரவு குருதி பூஜை நடை​பெற உள்​ளது.

அன்று இரவு 11 மணி வரை மட்​டுமே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனு​ம​திக்​கப்​படு​வர். ஜனவரி 20-ம் தேதி காலை​யில் பந்தள ராஜ வம்​சப் பிர​தி​நி​தி​யின் பிரத்​யேக தரிசனத்​துக்கு பிறகு கோயில் நடை அடைக்​கப்பட உள்​ளது.

திருச்செந்தூருக்கு ’சைக்கிள்’ யாத்திரை!

cycle yatra in maduri - 2026

உசிலம்பட்டி: திருச்செந்தூர் முருகனை தரிசிக்க உசிலம்பட்டி பகுதி வழியாக 150 க்கு மேற்பட்ட முருக பக்தர்கள் மிதிவண்டியில் யாத்திரை பயணம் மேற்கொண்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்நிலையில் , தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் மாலை அணிந்து மிதிவண்டியில் யாத்திரை பயணம் செல்கின்றனர்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி வழியாக பயணம் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செல்வது வழக்கம் இந்தாண்டு 34 வது ஆண்டு பயணம் செல்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் பெரும்பாலும் முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் உள்ள முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதை யாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.

தை அமாவாசை: சரவணப் பொய்கையில் பிதுர் தர்ப்பணம் அளித்து முன்னோர் வழிபாடு!

thai amavasai tharpanam in saravana poygai - 2026

மதுரை: தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத மகாளய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு இறந்த தங்கள் குடும்ப முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

இதன் மூலம் இறந்த தங்களின் முன்னோரின் ஆத்மா சாத்தியடைந்து அவர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரவண பொய்கையில் ஏராளமானோர் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், வைகை காலனி, அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம் , வரசித்தி விநாயகர் கோயில்களில் தை அம்மா வாசயை ஒட்டி, தர்பணம் செய்து வைக்கப்பட்டது.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக அவர்களை வேண்டி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவில் அருகில் உள்ள வைகை ஆற்றில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர்.
தொடர்ந்து, வைகை ஆற்றில் நீராடி சூரியனை வணங்கினர் பின்னர் திருவேடகத்தில் உள்ள திரு ஏடகநாதர் ஏலவார்குழலி திருக்கோவிலில் விளக்கேற்றி முன்னோர்களை வணங்கினர் .

இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் அருகில் உள்ள தேனி திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் தர்ப்பணம் கொடுக்கும் வருகை தரும் பொது மக்களுக்காக கோவில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

காவல் துறையினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வணங்கி செல்கின்றனர்.

டாலரை விற்று… தங்கத்தை ஏற்று… சரிக்கட்டும் போட்டியில் இந்தியா!

doller vs gold - 2026
  • சக்ரவர்த்தி மாரியப்பன்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் விவாதிக்கும் நபர்கள், ஊடகங்கள் மத்தியில் சர்வதேச நிகழ்வுகள் குறித்து பார்ப்பது அவசியம் ஆகிறது.

● கடந்த ஓராண்டில் இந்தியா, சீனா, பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களிடம் இருந்த டாலர் கடன் பத்திரங்களைப் #USTreasuryBonds பெருமளவு விற்றுள்ளன.

● US Treasury Bonds / Dollar Bonds என்பது அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரம். இவற்றை Bills (ஓராண்டு), Notes (2 முதல் 10 ஆண்டுகள்), Bonds (20 முதல் 30 ஆண்டுகள் வரை) என மூன்றாகப் பிரிக்கிறார்கள்.

● நமது ரிசர்வ் வங்கி இந்த பத்திரங்களை வாங்கி வைத்தால் ஆண்டுக்கு 4% முதல் 4.75% வரை வருமானம் ஈட்டும். அமெரிக்க அரசின் உறுதி (Sovereign Guarantee), பொருளாதார பலம், டாலரின் சர்வதேச டிமாண்ட் இந்த வருமானத்தை முடிவு செய்கிறது. இவை எல்லாம் சாதகமான அம்சங்கள்.

● பாதகங்கள் என்று பார்த்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை பயன்படுத்த முடியாமல் ரஷ்யா சிரமப்பட்டு வருகிறது. Sovereign Guarantee ஐ அரசே மீறுகிறது.

● ரஷ்யா போல ஈரான் உட்பட வேறு சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து சர்வதேச வர்த்தகத்தில் அவர்களின் செல்வாக்கைக் குறைத்து வருகிறது.

● #SWIFT போன்ற சர்வதேச கரன்சி பரிமாற்றங்களிலும் முட்டுக்கட்டை போடுகிறது. லண்டன் மற்றும் நியூ யார்க்கில் உள்ள சர்வதேச பணப்பரிமாற்ற வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள டாலர்களைத் தொட முடியாத வண்ணம் உள்ளூர் அரசின் அதிகாரம் வழியாகத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

● அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் இயங்கும் நயாரா #Nayara (ரஷ்யாவுடன் இணைந்து நாம் இயக்கும் பெட்ரோலிய நிறுவனம்) நிறுவனத்திற்கு Cloud Service Support ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அமெரிக்க அரசின் உத்தரவைக் காட்டித் தொழிலில் நேர்மையில்லாமல் அது நடந்து கொள்கிறது.

● அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் காரணமாக சீனா கடந்த சில ஆண்டுகளாகத் தன் கையிருப்பில் இருந்த டாலர்களை விற்று வருகிறது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.16 இலட்சம் கோடி) அளவு கையிருப்பை அது குறைத்து விட்டது.

● சீனா மட்டுமல்லாது நமது ரிசர்வ் வங்கியும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் (ரூ.4 இலட்சம் கோடி) அமெரிக்க டாலர் பத்திரங்களை கடந்த ஓராண்டில் விற்று விட்டது.

● சீனா, இந்தியா மட்டுமின்றி பிரேசில், சவுதி ஆகிய நாடுகளும் இதனைச் செய்வது முக்கியத்துவம் பெறுகின்றது.

● இன்று ரஷ்யா, ஈரானுக்கு நடப்பது நாளை #BRICS உட்பட பல்வேறு நாடுகளுக்கும் நடக்கும் என்று நாம் எண்ணுகிறோம்.

● முதற்கட்டமாக நாம் இங்கிலாந்தில் அடமானம் வைத்திருந்த 200 டன் தங்கத்தை சென்ற ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டோம். ஒரே நாளில் நமது அடமானத்தை மீட்க முடியாமல் போகலாம் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

● படிப்படியாக டாலர் சேமிப்பைக் குறைத்து மாற்று வழிகளில் நமது சேமிப்பை அதிகரிக்கிறோம். அதில் முக்கிய சொத்தாக தங்கம் உருவெடுத்துள்ளது.

● வருங்காலத்தில் டாலர் அல்லாத பன்னாட்டு வர்த்தகம் செய்ய வாய்ப்புகளைத் தேடி வருகிறோம். ரூபாய், யுவான், ரூபிள், திர்ஹாம், பிரேசிலின் ரியல் என இருநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தவும் முயற்சி செய்கிறோம்.

● #Vostro Accounts – வெளிநாட்டு வங்கிகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய இந்தக் கணக்குகளைத் துவக்க ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதற்கு இந்தியாவில் கிளை இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தையும் தளர்த்தியுள்ளது.

● வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்தால் அப்பணத்தை ரூபாய் கணக்கிலேயே இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்றும் சலுகை அளித்துள்ளது.

● நேற்று ரூபாய் மூலம் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றத்தை ஈடு செய்ய கூடுதலாக மூன்று மாதங்கள் (eg 15 for $ vs 18 for ரூ) அவகாசம் அளித்துள்ளது.

● சரி, #BRICS நாடுகள் டாலரைத் தொடர்ந்து விற்று வந்தால் டாலர் மதிப்பு ஏன் குறையவில்லை. அமெரிக்கச் சந்தை ஏன் விழவில்லை என்று கேள்வி எழுகிறது. இங்கு தான் அமெரிக்க லாபி வேலை செய்கிறது.

● அமெரிக்க டாலரை நாம் விற்றாலும் இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற வேறு சில நாடுகள வாங்க அமெரிக்க மறைமுகமாக நிர்பந்திக்கிறது.

● Treasury International Capital என்று இணையத்தில் தேடினால் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களை யார் வாங்குகிறார்கள் என்கிற விபரம் தெரிய வரும்.

● இந்த TIC Data வில் வெளிப்படும் உண்மை என்னவெனில் கடன் பத்திரங்களை வாங்குவது U.K அரசு அல்ல, அங்குள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் என்று தெரிய வருகிறது.

● பெல்ஜியத்தில் உள்ள மிகப்பெரிய ICSD ( நம்ம ஊர் NSDL, CSDL மாதிரி சர்வதேச Demat கணக்குகளை கையாளும்) நிறுவனம் #Euroclear வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

● இதே போல வரி சொர்க்க நாடான #CaymanIslands இல் இருந்து பெருமளவு டாலர் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

● இவை எல்லாம் பங்குச்சந்தை வணிகர்கள் போல, நீண்ட கால முதலீட்டாளர்கள் அல்ல. தேவையான இலாபம் கிடைத்தவுடன் குறுகிய காலத்தில் விற்றுச் சென்று விடுவார்கள்.

● அமெரிக்கா இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

● மேலும் திரு.டிரம்ப் அறிவித்துள்ள கடன் அட்டைகள் (Credit Card Interest) மீதான வட்டிக் குறைப்பு (<10% from 24-36%) அமெரிக்க வங்கிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

● வங்கிகள் தங்களது கடன் அட்டை வணிகத் தொகையை சந்தையில் பங்குப் பத்திரங்களாக விற்று வருகின்றன. டாலர் பத்திரங்களைப் போல இதுவும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

● நாளை அதிரடியாக வட்டியைக் குறைத்தால் அமெரிக்க வங்கித் துறை ஆட்டம் கண்டு விடும்.

● அமெரிக்க அரசின் கடன் மீதான வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.1 இலட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வருமானத்தை விட செலவு அதிகரித்துப் பற்றாக்குறை கூடியுள்ளது கவலைக்குரிய அம்சம்.

● அமெரிக்க அரசு தனது நம்பகத்தன்மையை இழந்து வருவதால், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தலைமை வங்கிகள் டாலருக்கு மாற்றாகத் தங்கம், உள்நாட்டு கரன்சி வர்த்தகம், கச்சா எண்ணெய் போன்ற மாற்றுப் பாதையில் கவனம் செலுத்துகின்றன.

● அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மிகவும் ரிஸ்க்கானவை என்று சீனா மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் முடிவெடுப்பது மிகவும் முக்கியமான விஷயம்.

● விசா, மாஸ்டர் கார்டுக்கு மாற்றாக நாம் #Rupay, #UPI, #RTGS என நிதிக் கட்டமைப்பை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்துள்ளோம்.

● #SWIFT க்கு மாற்றாக #BRICSpay, சீனாவின் #CIPS, Project #mBridge என பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் கண்களைத் திறந்திருக்கும் போதே வெண்ணெய் என்று ஏமாற்றி சுண்ணாம்பு வைக்கும் பேர்வழிகள் சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் உண்டு. தீவிரமான வாசிப்பு, ஒவ்வொரு எதிர்மறைச் செய்திக்கும் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வம் இல்லை என்றால் நீங்கள் விட்டில் பூச்சிகளாகத் தான் மாட்டிக் கொள்வீர்கள்.

ஸ்டாலின் போடும் கணக்கு! ஒத்துழைப்பாரா ராகுல்?

rahul and stalin - 2026

தமிழ்நாட்டில் தலித் வாக்கு 21 சதவீதம், சிறுபான்மை மக்களுக்கான வாக்கு சுமார் 18 சதவீதம். இந்த இரண்டு சேர்ந்து கிட்டத்தட்ட 40 சதவீதம். இந்த 40 சதவீத வாக்குகளை (இந்தியாவிலேயே தலித்+ சிறுபான்மை வாக்கு சதவிதம் அதிகம் உள்ள பெரிய மாநிலம் தமிநாடு தான். )மையமாக வைத்தே திமுக கடந்த 15 ஆண்டுகளாக தனது அரசியல் அறுவடையை செய்து வருகிறது. பாஜக என்ற ஒரு “பூச்சாண்டி”யை தொடர்ந்து காட்டி, தலித் மற்றும் சிறுபான்மை மக்களை அச்சத்தில் வைத்துக் கொண்டு தேர்தல் வெற்றிகளை குவிப்பதே திமுகவின் முதன்மை உத்தி.

தலித் மக்களிடம், “பாஜக வந்தால் இடஒதுக்கீடு ரத்து, இந்தி திணிப்பு, வடநாட்டு பிராமண ஆட்சி” என்ற செய்தியை திமுக தனது ஊடகங்கள் மூலம் இடைவிடாது செலுத்துகிறது. கல்வி அறிவு குறைந்த ஏழை தலித் மக்களை முழுமையாக பாஜக மற்றும் இந்திக்கு எதிராக திருப்புகிறது. அதே முறையை சிறுபான்மை மக்களிடமும் பயன்படுத்துகிறது. “பாஜக ஆட்சிக்கு வந்தால் மத சுதந்திரம் இல்லை, நாட்டைவிட்டு விரட்டுவார்கள், பாதுகாப்பு இருக்காது” என்ற அச்சத்தை தினசரி வீடியோக்கள், மேடைகள், பேச்சுகள் மூலம் விதைக்கிறது. இப்படி தலித் மற்றும் சிறுபான்மை மக்களை இந்து அரசியலுக்கும் இந்திக்கும் எதிரான மனநிலையில் உறைய வைத்து, திமுக இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டை முழுமையாக சுருட்டி நூறு சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டார்கள்.

இந்த அரசியல் தமிழ்நாட்டில் திமுகவுக்கு அறுவடை கொடுக்கிறது. ஆனால் அதே அரசியல், காங்கிரஸ் கட்சிக்கு வட இந்தியாவில் கல்லறை வெட்டுகிறது. திமுக இந்தி, இந்துத்துவா, வட இந்தியர்கள், இந்துக்கள் என்று ஒட்டுமொத்தமாக தாக்கும் அரசியலை நடத்துகிறது. இதை பாஜக வட மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக மாற்றுகிறது. “உங்கள் கூட்டணி கட்சி திமுக உங்களை இழிவுபடுத்துகிறது, உங்கள் மதத்தையும் மொழியையும் கேவலப்படுத்துகிறது” என்று காங்கிரஸை சுவர் ஓரமாக தள்ளுகிறது. அதன் விளைவாக வட மாநிலங்களில் காங்கிரஸ் பல இடங்களில் அரசியல் வரைபடத்திலேயே காணாமல் போகிறது.

இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்தியின் முன் ஒரு கடுமையான கணக்கை வைக்கிறார். “திமுகவின் இந்தி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் நமக்கு 40 தொகுதிகளை வாங்கித் தருகிறது. ஆனால் அதே அரசியல் வட இந்தியாவில் நம்மிடம் இருந்து 400 தொகுதிகளை பறிக்கிறது. இது லாபம் அல்ல, பேரழிவு” என்று நேரடியாக சொல்கிறார்.

அதோடு நிற்காமல் இன்னொரு உண்மையையும் மேசையில் வைக்கிறார். “திமுக எப்போதும் வெற்றி பெற முடியாது. அவர்களின் அறுவடை காலம் முடிவை நோக்கி செல்கிறது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களையும் அவர்கள் மீண்டும் எடுக்க முடியாது. கடந்த தேர்தலிலேயே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், நம் கூட்டணிக்கு 15 இடங்கள் கூட கிடைத்திருக்காது” என்று கையில் புள்ளி விபர எண்களோடு பேசுகிறார்.

பிறகு அடுத்த அடி. “திமுகவை மெதுவாக கழட்டி விடுங்கள். தாவேக்கா என்ற புதிய கட்சியுடன் கூட்டணி போங்கள். அதன் மூலம் தமிழ்நாடு மட்டும் அல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி என முழு தென் இந்தியாவிலும் நமக்கு புதிய வாசல் திறக்கும். 2029 தேர்தலுக்கு அது தான் சரியான முதலீடு” என்று ராகுல் காந்தியிடம் நேரடியாக பரிந்துரை செய்கிறார்.

அதே நேரத்தில் ஒரு பிளான் பி-யையும் வைக்கிறார். “திமுகவை உடனே விட்டு வெளியேற முடியாவிட்டால், அவர்களை அழுத்துங்கள். 38 முதல் 40 சட்டமன்ற தொகுதிகள் கேளுங்கள். ஒரு ராஜ்யசபா சீட் கேளுங்கள். மூன்று முக்கிய அமைச்சுப் பதவிகள், ஒரு துணை முதலமைச்சர் பதவி கேளுங்கள். இதை தரவில்லை என்றால், தாவேக்கா கூட்டணிக்கு நகருங்கள்” என்று தெளிவாக கோடு இழுக்கிறார்.

ஆனால் இந்த கணக்கு டெல்லியில் சரியாக இருந்தாலும், தமிழக காங்கிரஸின் சென்னை கணக்கு வேறு. தமிழக காங்கிரஸ் என்பது தொண்டர்கள் இல்லாத தலைவர்கள் நிறைந்த கட்சி. 99 சதவீத தலைவர்கள் திமுகவின் தயவில் அரசியல் உயிர் பிழைப்பவர்கள். திமுகவை விட்டு வெளியேறினால் தங்கள் அரசியல் வாழ்க்கை முடியும் என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் “திமுக இல்லாமல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் சாவு” என்ற குரலே தமிழக காங்கிரஸ் முகாமில் ஒலிக்கிறது.

இந்த நிலையை காங்கிரஸ் மேலிடமும் புரிந்து கொள்கிறது. “திமுகவுக்கு நாம்தான் தேவை, நமக்கு திமுக அவசியம் இல்லை” என்ற முடிவுக்கு டெல்லி மெதுவாக வருகிறது. அந்த கருத்தையும் ராகுல் காந்தியின் முன் மீண்டும் வைக்கிறார்கள்.

இதற்கிடையில் திமுகவும் கணக்குப் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை விட்டால் கன்னியாகுமரியில் கூட ஒரு சீட் கிடைக்காது. மூன்று புள்ளி ஐந்து சதவீத வாக்குகள் ஒரே இரவில் கரைந்து போகும். சிறுபான்மை வாக்குகள் விஜய் பக்கம் நகரும். இந்த உண்மை திமுக தலைமைக்கு தெளிவாக தெரியும். அதனால் தான், வெளியில் பேசாவிட்டாலும், உள்ளுக்குள் ஒரு முடிவை எடுக்கிறார்கள். “எத்தனை தொகுதிகள் கேட்டாலும் தருவோம். அமைச்சரவையில் இடம் தருவோம். துணை முதலமைச்சர் பதவியும் தருவோம். கூட்டணியை மட்டும் உடைக்காதீர்கள்”, கூட்டணியை உடைத்துக் கொண்டு போனால் உங்கள் கட்சி உடைந்து இதற்கு முன்பு மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது போல சிதம்பரம் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அல்லது தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்னும் ஒரு புதிய காங்கிரஸ் கட்சியின் பிளவு தமிழ்நாட்டின் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை வைத்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமைக்கு கசிய விடுற நிலைக்கு திமுக தயாராகிறது.

ஆனால் இதை இப்போது வெளியில் சொல்ல மாட்டார்கள். அதுபோல இப்போதே ஆட்சிப் பங்கு பேசினால், “திமுகக்கு தன்னம்பிக்கை இல்லை” என்று மக்கள் நினைத்து விடுவார்கள். அந்த பயம் அவர்களை அடக்கி வைத்திருக்கிறது.

இந்த எல்லாவற்றுக்கும் நடுவில் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் நிற்கிறது. திமுகவுடன் தொடர்வதா, அல்லது புதிய அரசியல் பாதையை திறப்பதா என்பது தான் கேள்வி. மல்லிகார்ஜுன கார்கே பெயரில் தலைவர் தான். அதிகாரம் இல்லை. ராகுல் காந்தி முடிவெடுக்க தயங்குகிறார். சோனியா காந்தி உடல்நலத்தால் அரசியலிலிருந்து ஓரமாக இருக்கிறார்.

யார் முடிவு எடுப்பார்கள் என்று தெரியாது. ஆனால் ஒரு முடிவு எடுக்காமல் காங்கிரஸால் இனிமேல் நகர முடியாது. அந்த முடிவு திமுகவின் அரசியலையும், காங்கிரஸின் எதிர்காலத்தையும், தமிழ்நாடு அரசியலின் திசையையும் ஒரே நேரத்தில் மாற்றப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், காங்கிரஸ் எந்த பக்கம் திரும்புகிறது என்று.

  • எம். தங்கராஜ்