ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பள்ளிப் பருவத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு என் வீட்டில் அதிகமான கட்டுப்பாடுகள் கிடையாது. என்னுடைய தாயார் அவருக்குப் பிடித்த படங்களுக்கு அழைத்துச் செல்வார். என் தந்தையாருக்கு பக்திப் படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, ஆந்திராவில் எடுக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் மிகவும் பிடிக்கும்.
இப்படி இருக்கையில் எங்கள் ஊருக்கு “கர்ணன்” படம் வந்தது. என் தாயார் என்னை மதியக் காட்சிக்கு அழைத்துச் சென்றார். என் தந்தையார் இரவுக்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். அடுத்த சில நாட்களுக்கு படத்தைப் பற்றிய விவாதம் இல்லத்தில் நடந்தது. எனது தாயார் கர்ணனும் துரியோதனனின் மனைவி பானுமதியும் சொக்கட்டான் விளையாடும்போது வரும் “எடுக்கவோ, கோர்க்கவோ” என்ற துரியோதனின் வசனத்தை சிறப்பாக எடுத்துப் பேசுவார்.
என் தந்தையார் பகவத் கீதையை ஏறத்தாழ மிகச் சரியாக ஒரு பாடலில் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னார். பின்னர் எப்படியோ பள்ளியில் எவனோ ஒருவன் வாங்கிவந்திருந்த கர்ணன் படத்தின் பாட்டுப்புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துவந்து என் தந்தையாரிடம் விளக்கம் கேட்டேன்.
அவர் சொன்னார் “பகவத்கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. அதில் முதல் ஆறு அத்தியாயங்கள் மனிதனைப் பற்றியது. அடுத்த ஆறு அத்தியாயங்கள் கடவுளைப் பற்றியது. கடைசி ஆறு அத்தியாயங்கள் மனிதன் இறைவனை அடையும் வழியைப் பற்றியது. இந்தப் பாடலில் இந்த மூன்று பிரிவுகளையும் அழகாக பிரித்துப் பாடியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். பாடல் இதோ –
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா.. மரணத்தின் தன்மை சொல்வேன்… மானிடர் ஆன்மா மரணமெய்தாது.. மறுபடி பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்.. வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்.
இதற்கு அர்ஜுனன் சொல்கிறான் – கண்ணா உனக்கு எல்லாம்தெரியும்; ஆனால் எனக்கு உன்னை தான் தெரியும்; பரந்தாமனைத் தான் தெரியும்; நீயா என்னை இந்த பாவத்திற்க்கு தூண்டுவது.
பாடல் மூலமாக கண்ணன், என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல் மனதென்றோ, காண்டீபம் நழுவ விட்டாய் … காண்டீபம் நழுவ விட்டாய்.. மன்னரும் நானே.. மக்களும் நானே.. மரம் செடி கொடியும் நா~னே.. சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்.. துணிந்து நில் தர்மம் வாழ
அர்ஜுனன் சொல்கிறான் – ஆனால் கொல்ல போவது நான் அல்லவா. அந்த பழி எல்லாம் எனக்கல்லவா. கண்ணன் காட்டிய வழியில் நீ எண்ணியதை நான் செய்து விட்டால்.. அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது? இந்த பிழைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல்.. சொல்…
கண்ணன் பாடலில் பதில் சொல்கிறார்… புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்… அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. கண்ணனே காட்டினான் … கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக ! நின் கை வன்மை எழுக! இக்களமெலாம் சிவக்க வாழ்க!
இந்தப் பாடல்தான் எனக்கு பகவத் கீதை பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை தந்த ஒரு பாடல். இதில் முதல் பத்தி மனிதனைப் பற்றி என்ன சொல்கிறது? மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டுமே. “பிற உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; மரணம் விளைவிக்கக் கூடாது” என்பது தர்மம். ஆனால் இங்கே கண்ணன் அர்ஜுனனைக் கொலை செய்யத் தூண்டுகிறார்.
அங்கே வங்கதேசத்திலே, ஒரு தலித் இளைஞரை உயிரோடு எரித்து விட்டார்கள். நீங்கள் எல்லாரும் காஸா பகுதியில் ஏதாவது நடந்தால் அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்களே!! ஆனால், உங்கள் வாயிலிருந்து ஒரு சொல்கூட வரவில்லை, ஏனென்றால் ஒரு தலித் இளைஞர், வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான், ஆனால், அந்த இளைஞரின் மரணத்திற்காக, ஒரு வார்த்தை உங்கள் வாய் உதிர்க்கவில்லை. ஏனென்றால், நீங்கள் அவர்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சொல்லவே மாட்டீர்கள். காஸாவிற்காக மெழுகுவர்த்தி ஊர்வலம் எடுத்துச் செல்வீர்கள். ஆனால் பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்கள் கொல்லப்பட்டால் பேசா மடந்தைகளாகி விடுவீர்கள். ஏனென்றால் கொல்லப்படுபவர், ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர்.
காந்தியடிகளின் குரங்குகள் மூன்று இருந்தன. காந்தியடிகள் அவற்றுக்கு உபதேசம் கூறியிருந்தார். தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, மற்றும் தீயதைப் பேசாதே. ஆனால் இன்று இண்டிக் கூட்டணியில் மேலும் 3 குரங்குகள் இணைந்து விட்டன. பப்பு டப்பு மற்றும் அப்பு அவற்றின் பெயர்கள். பப்புவால் நல்லதைப் பேசவே முடியாது. டப்புவால் நல்லதைப் பார்க்கவே முடியாது. அடுத்து…. அப்புவால், உண்மையைக் கேட்கவும் முடியாது.
வங்கதேசத்தில் ஓர் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை அன்று மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்.
எதிர்க்கட்சிகள் ‘தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டும் கோபப்படுவதாகவும், தாஜா அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சிகள் மௌனமாக இருப்பதாகவும், அதே சமயம் சர்வதேசப் பிரச்சினைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் போராட்டம் நடத்துவதாகவும் யோகி குற்றம் சாட்டினார்.
“காசா பகுதியில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நீங்கள் கண்ணீர் வடிக்கிறீர்கள், ஆனால் வங்கதேசத்தில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டபோது உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை,” என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளை ‘வாக்கு வங்கி மற்றும் தாஜா அரசியலுக்காக’ பயன்படுத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானும் வங்கதேசமும் உருவாக்கப் பட்டிருக்காவிட்டால், இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருக்காது என்று யோகிஜி கூறினார். “நீங்கள் காசாவுக்காக மெழுகுவர்த்தி பேரணிகளை நடத்துகிறீர்கள், ஆனால் பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ ஒரு இந்து கொல்லப்படும்போது, பாதிக்கப்பட்டவர் ஒரு இந்து, ஒரு தலித் என்பதால் உங்கள் வாய்கள் மூடப்படுகின்றன,” என்றார் அவர் .
சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
“எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து ஒரு கண்டனத் தீர்மானம் வர வேண்டும். நாங்கள் இந்த சம்பவத்தைக் கண்டிக்கிறோம், மேலும் வங்கதேச அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக எதிர்க்கட்சிகளையும் அவர் குறிவைத்து, அவர்கள் பங்களாதேஷ் நாட்டினருக்கும் ரோஹிங்கியாக்களுக்கும் ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் வங்கதேசத்தவர்களை இங்கிருந்து வெளியேற்றி, ரோஹிங்கியாக்களுக்கு வெளியேற வழி காட்டும் போது, அவர்களுக்கு ஆதரவாக வராதீர்கள். நீங்கள் அவர்களில் பலரை வாக்காளர்களாகப் பதிவு செய்து, ஆதார் அட்டைகள் கூட எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்,.. என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளதையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வெள்ளிக்கிழமை மாலை சன்னிதானம் வந்தடைந்ததும் சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து பூஜைகள் தீபாராதனை வழிபாடு நடைபெற்றன.
இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிச 27 சனிக்கிழமை காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஆண்டு தோரும் எடுத்து வரப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊா்வலம், ஐயப்பன் கோயிலை வெள்ளிக்கிழமை மாலையில் வந்தடைந்தது.
திருவாங்கூர் தேவசம் ரோடு அதிகாரிகள் சபரிமலை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் தந்திரி ஆகியோர் தங்கி வரவேற்றனர் 18 படி வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்கு அங்கி பெட்டகம் சுவாமி ஐயப்பன் சந்நிதிக்கு எடுத்து செல்லப்பட்டு மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மூலஸ்தானத்திற்குள் தங்கி அங்கியை எடுத்துச் சென்று சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து அலங்கரித்து சிறப்பு தீபாராதனை வழிபாடு இன்று மாலை 6:30க்கு துவங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தங்கி அணிந்த சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர் .
இந்த தங்காங்கி 4 21 பவுன் எடை கொண்டது இந்த தங்கி அங்கி திருவாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பனுக்காக சபரிமலை மூலஸ்தானத்தில் உள்ளது போல் செய்து வழங்கியது ஆகும்
நாளை சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மண்டல பூஜை. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த 41 நாட்கள் மண்டல காலத்தின் போது மட்டுமே நீண்ட நாட்கள் திறந்திருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல காலத்தில் மாலை அணிந்து, கடுமையாக விரதம் இருந்து சபரிமலை வந்து, சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு புனிதத் தலமாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது மண்டல பூஜை ஆகும். மலையாள மாதமான ‘விருச்சிகம்’ (கார்த்திகை முதல் தேதி) முதல் தேதியில் தொடங்கி, 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வழிபாட்டு காலமே மண்டல காலம் எனப்படுகிறது. இந்த 41 நாட்களின் நிறைவு நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையே ‘மண்டல பூஜை’ ஆகும். இது பொதுவாக டிசம்பர் மாதம் 26 அல்லது 27-ம் தேதிகளில் நடைபெறும். இந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதியான நாளை சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நடைபெற உள்ளது.
மண்டல பூஜையின் உண்மையான பலனைப் பெற ஒரு பக்தர் 41 நாட்கள் கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தைத் தொடங்கும் பக்தர்கள் துளசி அல்லது உருத்திராட்ச மாலையை அணிந்து ‘சுவாமி’யாக மாறுகிறார்கள். மது, புகை, அசைவ உணவுகளைத் தவிர்த்தல், பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தல் மற்றும் தரையில் உறங்குதல் போன்றவை கட்டாயமாகும். கறுப்பு, நீலம் அல்லது காவி நிற ஆடைகளை அணிவதன் மூலம், உலகியல் சுகங்களைத் துறந்து அனைவரும் சமம் என்ற மனநிலையை பக்தர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் தங்களின் பாவ-புண்ணியங்களை மூட்டையாகக் கட்டி, நெய் தேங்காயுடன் தலைப்பொதியாகச் சுமந்து வருவது ‘இருமுடிக்கட்டு’ எனப்படும். இது “நான்” என்ற அகந்தையை விட்டு இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கிறது.
மண்டல பூஜைக்கு சில நாட்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் மன்னரால் வழங்கப்பட்ட 421 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஆரண்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். மண்டல பூஜை அன்று இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும்.பக்தர்கள் கொண்டு வரும் பசு நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நெய் என்பது ஆத்மாவையும், தேங்காய் என்பது உடலையும் குறிப்பதாக ஐதீகம். மண்டல பூஜை அன்று வேத மந்திரங்கள் முழங்க சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படும். பிறகு பதினெட்டு படிகளுக்கும் பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 23ம் தேதி துவங்கியது. சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் தங்க அங்கி, இன்று மாலை நடைபெறும் சிறப்பு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
நாளை மண்டல பூஜை யின் போதும் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடைபெறும்.இரவு படிபூஜை நிறைவடைந்ததும் இரவு 10.30 மணியளவில் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்படும். அதோடு இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நிறைவு பெறும். மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.
மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15ம் தேதியன்று பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அறிவிக்கப்பட்டு, பூஜைகளை நடைபெற்ற பிறகு மாலை 6 மணிக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 19ம் தேதி இரவு வரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 19ம் தேதியன்று மாலையுடன் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தப்படும். ஜனவரி 20ம் தேதியன்று காலை 7 மணியளவில் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முன்னிலையில் சபரிமலை நடை அடைக்கப்படும்.
ஆழிப்பேரலை, டிசம்பர் 26, 2004 – அந்த இரண்டு மணி நேரம்
— முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
பூமிக்கடியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக திரண்டுகொண்டிருந்த சக்தி திடீரென்று 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் ஓரு நிலநடுக்கமாய் வங்கக் கடலில் வெளிப்பட்டது. 1000 கிலோமீட்டர் நீளமான கடற்பரப்பில், சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு கடல் பரப்பில் கண்டத்தகடுகளுக்கிடையே இருந்த ஓரு பிளவு இந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமி அலைகளால் அன்று மாலைக்குள் பலிவாங்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வக் கணக்கின்படி 1,84,167. சுமார் 2.5 இலட்rம் மக்கள் இறந்திருக்கக்கூடும் என்பது வேறு ஓரு கணிப்பு.
இந்திய நேரப்படி டிசம்பர் 26, 2004 அன்று காலை 06 மணி 28 நிமிlத்திற்கு சுனாமி அலைகளை எழுப்பிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. சுனாமியின் முதல் அலைகளால் இந்தியக் கடற்கரை, குறிப்பாகத் தமிழகக் கடற்கரை தாக்கப்பட்டது காலை 0830 மணிக்காகும். இந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது ? இயற்கை நமக்கு நடத்திய பாடம் என்ன ?
இந்திய நேரம் காலை 06:28க்கு வடக்கு சுமத்ராவுக்கு 60 கிமீ மேற்கில் இந்தோ/ஆஸ்திரேலிய கண்டத்தகடும் யூரேசிய கண்டத்தகடும் ஓன்றின்மேல் ஓன்று சரிந்ததால் ஓரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. 10,000 அணுகுண்டுகள் வெடிக்கும்போது ஏற்படும் சக்தியை இந்த நிலநடுக்கம் வெளிக்கொணர்கிறது.
06:29க்கு இந்jனோசியாவின் படாங் நகரில் ஓரு நில-இயற்பியலாளரால் தன்னுடைய நிலநடுக்க அளவியிலிருந்து, ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவுள்ள நிலநடுக்கம் அருகாமையில் நிகழ்ந்துள்ளது என அறிகிறார். ஜகார்த்தாவில் உள்ள தேசிய நிலநடுக்க மையத்திற்கு செய்தி அனுப்ப முயற்சிக்கிறார், ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.
இந்திய நேரம் 06:34க்கு பசுபிக் சுனாமி மையத்தில் பணிபுரியும் இருவர் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுப்படி 7.0ஆக இருக்கலாம் என முடிவு செய்து, அவர்களின் எச்சரிக்கை வலையத்துள் உள்ள நாடுகளுக்கு அறிக்கை அனுப்புகின்றனர். சிறிது நேரத்தில், சில கணக்கீடுகளுக்குப் பிறகு நிலநடுக்கத்தின் அளவு 8.0ஆக இருக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
தாய்லாந்து நாட்டிலும் இந்த அறிக்கை பெறப்படுகிறது. ஆனால் சுற்றுலாத் துறைக்கு பொருளாதார அளவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற விவாதத்தில் சுனாமி எச்rரிக்கை தருவதில் தாமதமேற்படுகிறது. அடுத்த ஆறு நிமிlத்தில் சுனாமி சுமத்ராவின் பந்தா ஏக் பகுதியைத் தாக்குகிறது.
08:31க்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுனாமி எச்சரிக்கை தரப்படுகிறது. ஆனால் தூதரக உறவுகளில் உள்ள சிக்கல்கள் காரணமாய் சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படவில்லை. உலகிலேயே மிக அதிநவீன கருவிகளோடு இயங்கும், ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரத்தில் அமைந்துள்ள நிலநடுக்க எச்சரிக்கை மையம் உலகெங்கிலுமுள்ள 300 நிலையங்களிலிருந்து நிலநடுக்கம் பற்றிய தகவல்களைப் பெறுகிறது.
இம்மையத்திலுள்ள கணினிகள் நிலநடுக்கம் பற்றியும் சுனாமி பற்றியும் தானாகவே தகவல்கள் பெறக்கூடிய வசதியுடையது. இருப்பினும் அங்கிருந்து எந்தத் தகவலும் அல்லது எச்சரிக்கையும் தரப்படவில்லை. ஏனெனில் அன்று அந்த மையத்திற்கு விடுமுறைநாள்.
பசுபிக் சுனாமி எச்rரிக்கை மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அந்த இரண்டு அறிவியலாளர்கள் கடந்த ஓரு மணி நேரமாக தங்களின் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் புதிய கணக்குகள் நிலநடுக்கத்தின் வலு ரிக்டர் அளவுகோலில் 8.5ஆக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறது. இது நிலநடுக்கத்தின் சக்தி முன்னர் நினைத்ததைவிட பத்து மடங்கு அதிகம் என்பதனைக் காட்டியது.
குழப்பத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்களின் தலைவருக்கு தகவல் தருகின்றனர். இருப்பினும் பேரழிவைத் தரக்கூடிய சுனாமியை இந்நிலநடுக்கம் உருவாக்கும் என்ற எண்ணம் இன்னமும் இங்கு யாருக்கும் தோன்றவில்லை. இருப்பினும் இருபது நிமிlங்களுக்கப் பிறகு மீண்டும் ஓரு புதிய எச்சரிக்கை தரப்படுகிறது.
இந்திய நேரம் காலை 09:50க்கு தாய்லாந்தின் சுற்றுலாத்தலமான புகெட் நகரை சுனாமி அலைகள் தாக்குகின்றன. சில நிமிlங்களில் இந்திய மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை சுனாமி தாக்குகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய உடனடித் தகவல்கள் உலகத் தொலைக்காட்சிகளில் வெளிவரத் தொடங்குகிறது.
அதுவரை உறங்கிக் கொண்டிருந்த, அறியாமையில் விழித்துக் கொண்டிருந்த, கிறிஸ்த்மஸ் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருந்த உலகம் சுனாமி என்கிற ஓரு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதை உணரத் தொடங்கியது.
சுனாமி அலைகள் தொடர்ந்து மாலத்தீவுகள், ஆப்பிரிக்கா நோக்கி நகருகின்றது என உணரப்பட்டது. இயற்கை நமக்களித்த அந்த இரண்டு மணி நேரம் நம்மை நாம் காத்துக்கொள்ள பயன்படவில்லையா ?
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சுனாமி பற்றி மக்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்ளின் நிலவியல் பாடத்தில் சுனாமி இடம் பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு வரை தேர்வுகளில் ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ பகுதியில் ஓரு மதிப்பெண் தரக்கூடிய செய்தியாக அது இருந்தது. தமிழ் இலக்கியங்களிலும் ‘சுனாமி’ என்ற ‘கடல்கோள்’ பற்றிய செய்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளன.
மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் என்று கலித்தொகையும்
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு’ கொடுங்கடல் கொள்ள – எனச் சிலப்பதிகாரமும் கடல்கோள் பற்றி நேரடியாகவே குறிப்பிடுகின்றன. 1883ஆம் ஆண்டு இந்தோனேசியப் பகுதியில் ஏற்பட்ட ஓரு எரிமலை வெடிப்பால் சென்னை உட்பட பல இடங்களைத் தாக்கிய சுனாமி பற்றிய ஓரு வரலாற்றுக் குறிப்பும் 1945இல் பாகிஸ்தானின் ‘மகரான்’ கடற்கரைப் பகுதியில் ஏற்ப்பட்ட ஓரு நிலநடுக்கத்தால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள் பாதிப்புக்குள்ளான மற்றொரு வரலாற்றுக் குறிப்பும் நமக்கு முன்னரே கிடைத்திருந்தன.
கடுமையான புயல்கள் இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடக்கும் போது சுனாமி அலைகள் போன்ற ஆனால் சற்றே அளவு குறைவாd ‘பொங்கலைகள்’ ஏற்படுவதும் நாம் அறிந்ததே, ஆயினும் இந்தியா போன்ற தகவல் தொழில்நுட்பம் சிறப்பான அளவில் இருக்கும் ஓரு நாட்டில் சுனாமி எச்சரிக்கைக் கட்டமைப்பு ஏற்படுத்தாது பற்றி டிசம்பர் 2004க்கு முன்னர் எவரும் நினைக்கவில்லை.
ஆனால் 2004க்கப் பிறகு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் அலைகளின் உயரத்தைக் கணக்கிட ‘பொங்கலைமானிகள்’ (tide gauges) அமைக்கப்பட்டுள்ளன, இவை புயற்கால பொங்கலைகள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்க மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஆனால் சுனாமி அலைகளைக் கண்காணிக்க, வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்க ஆபத்து அதிகமுள்ள ‘லைன் ஆப் ஃபயர்’ (line of fire) என்ற பகுதியிலிருந்து வரக்கூடிய சுனாமி அலைகளைக் கண்டுபிடிக்க அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய ஓரு கட்டமைப்பு தேவைப்பட்டது. இதற்கென வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.
எனவே முழுவதும் இந்திய் தொழில்நுட்பத்தால் அமைந்த ‘தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்’ 2007ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் ஹைதராபாத்தில் தொடங்கப்பgட்டது. தற்போது ரிக்டர் அளவுகோலில் 6.0த்திற்குமேல் சக்தியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டால் அது தேசிய நிலநடுக்க மையத்தின் நிலநடுக்கமானிகளின் வலையமைப்பு மூலமாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும்.
ஆழ் கடலில் அமைக்கப்பட்டுள்ள கடல் அடிமட்ட அழுத்த உணரிகள், சுனாமி அலைகள் உருவாகியிருந்தால் அதனை உறுதி செய்யும். ‘சர்வே ஆப் இந்தியா’ சுனாமி அலைகள் நகர்வதைக் கண்காணிக்க 30 பொங்கலைமானிகளை அமைத்துள்ளது. ‘இன்டகரேட்டட் கோஸ்டல் அண்ட் மரைன் ஏரியா மேனேஜ்மென்ட்’ (Integrated Coastal and Maraine Area Management) என்ற அமைப்பு கணினியில் சுனாமி மாடல்களை (Tsunami Models) உருவாக்கி இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் எவ்வெப்பகுதிகள் சுனாமி தாக்குதலால் அதிகமான பாதிப்பைப் பெறகூடியவை என்று கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கணினி மாடல்களுக்குத் தேவையான கடலோரப் பகுதிகளின் வரைபடங்களை நேசனல் ரிமோட் சென்சிங் நிறுவனம் (National Remote Sensing Agency – NRSA) தன்னுடைய கார்டோசாட் (Cartosat) செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் தjருகிறது. சுனாமி எச்சரிக்கைகுத் தேவையான தகவல்களை உடனடியாகப் பெற்றுத் தருவதில் இஸ்ரோ (ISRO) தன்னுடைய செயற்கைக்கோள்கள் மூலம் துணைபுரிகிறது.
இவ்வாறு அந்த இரண்டு மணி நேரம் இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில் வழித்தட பயணிகளுக்கு வசதிக்காக ஜனவரி 1 முதல் புதிய கால அட்டவணைப்படி பகல் நேர திருநெல்வேலி செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் நேரத்தில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 01.01.2026 முதல் இந்த புதிய நேர அட்டவணை அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் நெல்லை – தென்காசி வழித்தடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய நேர அட்டவணைப்படி, நெல்லை ஜங்ஷனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. இந்த நேர மாற்றம் காரணமாக, செங்கோட்டை மற்றும் இடைநிலையங்களுக்கு பயணம் செய்யும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக வசதியைப் பெறுகின்றனர். நீண்ட காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சந்தித்து வந்த சிரமங்களுக்கு இந்த நேர மாற்றம் ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.
மேலும், இரணியல், நாகர்கோவில், வள்ளியூர் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் – திருச்சி (22628) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ஜங்ஷனுக்கு மதியம் 2.20 மணிக்கு வந்து சேர்வதால், அந்த ரயிலில் வரும் பயணிகள் நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு எளிதாக மாற்றிச் செல்ல முடிகிறது. இதனால் நீண்ட நேரக் காத்திருப்பு இல்லாமல் பயணம் சாத்தியமாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்த நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில், நெல்லை – தென்காசி வழித்தட மக்களுக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் செங்கோட்டை – தாம்பரம் ‘சிலம்பு’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறந்த இணைப்பை வழங்குகிறது. இந்த இணைப்பின் மூலம் பயணிகள் சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு எளிதாகப் பயணம் செய்ய முடிகிறது.
முன்னதாக இந்த வழித்தட மக்களுக்கு நேரடி மற்றும் வசதியான ரயில் இணைப்புகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது செய்யப்பட்ட இந்த நேர மாற்றம் பயண நேரத்தை குறைப்பதோடு, மாற்றுப் போக்குவரத்து தேவையையும் பெருமளவில் குறைக்கிறது.
குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறுநகர மக்களுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். மொத்தத்தில், நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலின் இந்த நேர மாற்றமும், அதனுடன் கிடைத்துள்ள முக்கிய ரயில் இணைப்புகளும் தென் தமிழக ரயில் பயண வசதிகளை மேம்படுத்தும் ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.
முடுவார்பட்டி ஸ்ரீ வேலவன் திருக்கோவில் மார்கழி உத்ஸவ விழா!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி அம்மை, தெய்வானை அம்மை, உடனாகிய ஸ்ரீ வேலவன் திருக்கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற உற்சவ விழாவில் முதல் நாளில் பக்தர்கள் வக்கீல் ஊத்துக்கு சென்று தீர்த்தமாடி வருதல், அன்று இரவு உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தென்காசி மாவட்டம் சுரண்டை சத்யா செல்வின் குழுவினரின் கிராமிய வில்லிசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாளில் முருகப்பெருமான் பூப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. பின்னர் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட அன்னதான விழா நடந்தது. பின்னர் பழனிமலை முருகனை காண 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை நிகழ்வு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை முடுவார்பட்டி வேலவன் திருப்பணி குழு மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
திருவோண நட்சத்திரம் சிறப்பு பூஜை!
மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், திருவோண நட்சத்திரம் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், லட்சுமி ஹயக்கீரிவருக்கு அர்ச்சணை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் செய்து இருந்தனர்.
ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேகம்
மதுரை உசிலம்பட்டி அருகே, புதியதாக கட்டப்பட்ட அருள்மிகு ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து , கணவாய் ஐயப்பன் திருக்கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் ஹரிஹரன் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள கன்னி மூல கணபதி மற்றும் சிவன், முருகன் ஆகிய சிலைகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் , ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The mid-winter air of Chennai is expected to smell of jasmine, wet silk, and filter coffee. This Margazhi, however, it carried something heavier—a quiet dread. For weeks, the great sabhas stood like emptied temples after a festival aborted midway. The silences were not restful; they were accusatory.
Whispered theories circulated in canteens and corridors: had the rasika moved on? Had the long apprenticeship of listening finally yielded to distraction, convenience, and screens? Was the Mahotsav itself becoming a relic, fondly remembered but no longer lived?
Then, at precisely eighteen hundred hours on the twenty-fifth of December, at Narada Gana Sabha, the spell broke. The emptiness did not merely dissolve—it was overwhelmed. Review of the concert could wait. What mattered first was the unmistakable sound of return.
For nearly a decade, the sixteenth hour on the twenty-fifth of December had been a fixed star in the Margazhi firmament. At four in the afternoon, year after year, Ranjani and Gayathri—RaGa to rasikas—took the stage at The Music Academy before a sell-out crowd that treated that slot as sacrosanct.
The Academy, long regarded as the elitist preserve of Carnatic orthodoxy, yielded effortlessly to their presence. Aisles filled, stairways were claimed, and even the edge of the dais became fair game. That certainty, however, ended in rupture.
In the 2024–25 season, RaGa chose to step away. Their boycott of the Academy was neither theatrical nor impulsive. It was a deliberate act of principle—to uphold the values that have made Carnatic music what it is at its core: a divine, inward, bhakti-driven experience, not a negotiable cultural commodity.
Predictably, the choice unsettled the ecosystem. The gesture was variously labelled arrogance, obstinacy, courage, or defiance. Yet what many mistook for abandonment was, in fact, leadership. In a cultural horizon accustomed to quiet compliance, RaGa demonstrated—without slogan or sermon—that conviction still had a spine. They did not merely wear the mantle of musicianship; they wore the pants.
This season, the answer came not as a hashtag or viral clip, but as bodies—thousands of them—queuing, jostling, negotiating space with the old choreography of devotion. The turnstiles groaned. The ticket counter was irrelevant.
Balconies were staked out with handbags and handkerchiefs, those quiet insignia of veteran rasikas. Extra chairs appeared like emergency rations. Even the ground floor, priced beyond nostalgia, was a heaving ocean of heads. This was not attendance; it was allegiance. The prodigal rasika had come home.
In an age that tempts music into T20 bursts and algorithmic approval, this gathering affirmed something older and sterner: that the rasika still recognises conviction. Mastery alone no longer suffices; it must be accompanied by moral temperature. The audience did not merely come for raga and tala—they came to stand with musicians whose choices mirrored their own unease with inherited hierarchies.
When the curtain rose, the artistes were not isolated beneath lights; they were held. The crowd on the dais formed a human rampart, shielding them from the ghosts of institutional seasons past. Every alapana crackled with shared intent.
Every thani avarthanam was met not with polite approval but with thunder. Power had shifted. Fame, it seemed, was no longer dispensed solely by entrenched gatekeepers but forged anew in the furnace of collective belief.
That evening, the music was luminous—but it was the second miracle. The first was witnessing a community rediscover its pulse, reclaiming Margazhi not as a schedule, but as a shared inheritance. The rasika had not vanished. They had merely been waiting—for a reason to return, and for music worthy of calling them home.
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களில் முக்கிய கோவிலாக அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது
கேரள மாநிலம் அச்சன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில், மண்டல பூஜையையொட்டி மகோத்சவ திருவிழா டிச 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
திருவிழாவின் முதல் ஐந்து நாட்களில் பிரதானமாக உற்சவபலி நடைபெற்றது. ஆறாம் மற்றும் ஏழாம் நாள்களில் கருப்பன் துள்ளல் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. எட்டாம் திருநாளில் எட்டாம் பூராம் நிகழ்வும் நடைபெற்றது.
ஒன்பதாம் திருநாளான இன்று டிசம்பர் 25 கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெற்றது. கேரளாவில் இரு கோவில்களில் மட்டுமே தேரோட்டம் நடைபெறும் ஒன்று பாலக்காடு கல்பாத்தி விசுவநாதர் கோயில் இரண்டாவது அச்சன்கோவில் ஆகும்.
இந்த ஆண்டு அச்சன்கோவில் நடந்த தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தமிழகம் கேரளாவில் இருந்து பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. பத்தாம் நாள் விழாவில் வெள்ளி கிழமை முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும்.
தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மதியம் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களை பரவசப்படுத்தியது.
It is 13.22 PM. December, 25th, 2025. Thursday. Venue: R R Sabha, Mylapore. Auspices: Brahma Gana Sabha.
It is not every season that young rookies get to perform on stages of major Sabhas.
The atmosphere carried that unmistakable Margazhi electricity—part incense, part expectation, part silent prayer that at least the front rows would be occupied. Under the benevolent umbrella of Brahma Gana Sabha, the young vocal duo took the stage, supported with quiet assurance by Madhumitha Doraiswamy on the violin and Rishi Manoharan on the mridangam, both well aware that afternoon concerts are less about applause and more about faith.
They opened with Eka Dantham in Bilahari, a buoyant homage to Muthuswamy Dikshitar in his 250th birth anniversary year. Bilahari did what it does best—smiled reassuringly—even as the reviewer slipped into a philosophical emergency. What does one do when the pen in one’s hand shares both lineage and lunch table with the voices on stage?
Music criticism, tradition insists, has a Lakshmana rekha. One may father a musician, encourage them, finance them, even panic discreetly on their behalf. But the moment one reviews them, criticism risks becoming autobiography.
To review one’s own daughters’ concert is parental courage masquerading as detachment. If generous, it is nepotism; if severe, it is courage admired only by those not invited home thereafter. Subtlety, that elusive madhyama mārga, rarely survives blood relations. Music demands ruthless honesty; parenthood thrives on selective deafness.
History offers little comfort. Paternal commentary has oscillated between terrifying severity and indulgent advocacy. These are cautionary tales, not templates. Mercifully, this afternoon required neither. When the duo rendered Parthasarathy Nannu Palimpara in Madhyamavathi, the choice felt geographically apt—a gentle salute to Triplicane, once enfolded within Mylapore’s cultural embrace.
As for the turnout, let us be charitable. The hall was… spacious. It would have taken a RaGa to fill it. Get it? Margazhi, however, is forgiving; empty chairs have heard great music before.
Full disclosure, then: the performers were Bhargavi and Ranganayaki, and the reviewer their father. In the Chennai season, even the most improbable family arrangements eventually find their rhythmic resolution—usually in Ādi tāla.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது…
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரவோ படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய
/ மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும், இச்செயல் திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தப்படவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.